25 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கொலை – ஐவருக்கு மரண தண்டனை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குருநாகல் – வெலகெதர பகுதியில் 25   வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம்  நேற்று (17/07) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி, ஒரு குழுவினர் வெலகெதர, தியகவிட்டியிலுள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே ஐவரும் கொலைக் குற்றம் மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து, அவர்கள் ஐந்து பேருக்கும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment