By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது – ஜனாதிபதி
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > 2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி

2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது – ஜனாதிபதி

Last updated: 2024/12/19 at 5:47 AM
Published December 19, 2024 139 Views
Share
14 Min Read
SHARE

ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய முழு உரை 

– நேற்றைய தினம் (டிசம்பர்18) கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான மூன்று மணித்தியால விவாதம் ஒன்றுநடைபெற்றது. தற்போது வரையிலான கடன் மறுசீரமைப்பு வழிமுறைதொடர்பிலும், அதன்போதான அடைவுகள் குறித்து எமது அமைச்சர்களும் நிதிபிரதி அமைச்சரும் தெளிவூட்டினார். அதனால் அதுபற்றி விரிவாக பேசவில்லை. இருப்பினும், 2028 ஆம் ஆண்டளவில் கடன் மீளச்செலுத்தப்படவிருப்பதால் நாடுமீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என்ற எண்ணம்தோற்றுவிக்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமேஇருக்கப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் 2022 – 2023 களில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும்ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என இன்று பாராளுமன்றில் விசேடஉரையொன்றை ஆற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

எமது வெளிநாட்டு கையிருப்பை 2028 ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன்டொலர்களாக அதிகரித்துக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நாம் இருக்கிறோம். 15.1 டொலர் பில்லியன் வெளிநாட்டுக் கையிருப்பை ஈட்டிக்கொள்ள முடியும் என்றவலுவான நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இதுபற்றி பலரும் ஆலோசனைகளைவழங்கினர். அவை நல்ல ஆலோசனைகள். ஆனால் முக்கியமான விடயம் என்ன?

இப்போது நாம் 12.55 பில்லியன் டொலர்களையும் அதேபோல் செலுத்தத் தவறியகடன் 1.7 டொலர் பில்லியன்களையும் நாம் மறுசீரமைப்புக்குஉட்படுத்தியுள்ளோம். இந்த 12.5 பில்லியன் டொலர்களில், 11.5 பில்லியன்டொலர்கள் 2015 – 2019 வரையான அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனாகும்.

அன்று இந்த ஆலோசனைகளை வழங்கியிருந்தால் எமது நாடு வங்குரோத்துநிலையை அடைந்திருக்காது. அதனால் ஆலோசனைகள் தாமதமாகிவிட்டனஎன்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆலோசனைகளை சரியான நேரத்தில்வழங்குவதே அதற்கான பெறுமதியாகும்.

மிகத் தாமதமாகி ஆலோசனை வழங்கினால் அது வலிதற்றதாகிவிடும். சர்வதேசநாணய நிதியத்துடன் இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்து இரண்டாவதுதவணைக்கும் அனுமதி பெறப்பட்டிருந்தது. நாம் அதிகாரத்தை பொறுப்பேற்கும்வேளையில் மூன்றாவது மீளாய்வு தாமதமாகியிருந்தது. செப்டம்பரில் அதனைஆரம்பிக்க வேண்டியிருந்தது.

இருப்பினும் தேர்தல் நடக்கின்ற வேளையில் மூன்றாவது மீளாய்வுக்குதயாரில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது. அதன்படி, பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி நாம் மீண்டும்சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீளாய்வை ஆரம்பித்தோம். இரண்டாவது மீளாய்வில் முன்னைய அரசாங்கத்தினால் பல

அடைவுகள்,இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

அவற்றில் ஒன்று, 2025 ஆம் ஆண்டிலிருந்து வாடகை வருமான சொத்துக்கள் மீதுவாடகைவருமான வரி விதிப்பது குறித்து இரண்டாவது மீளாய்வில் இணக்கப்பாடுஎட்டப்பட்டிருந்தது.

சேவை ஏற்றுமதி மீது 30 வீத கூட்டிணைத்தல் வரியொன்றை விதிப்பதற்குஇரண்டாவது மீளாய்வில்உடன்பாடு காணப்பட்டது. அதேநேரம், ஜனவரியிலிருந்து விசேட வர்த்தக பொருட்கள் மீதானவரியை நீக்கி, பெறுமதிசேர் வரி யுடன் இணைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த விசேட வர்த்தக பொருட்கள் மீதான சேவை வரியின் ஊடாக எமது நாட்டின்உள்நாட்டுஉற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக வரி விதிப்பு, வரி அதிகரிப்பு, வரி குறைப்பு ஆகியவற்றைமேற்கொள்கிறோம். இரண்டாவது மீளாய்வுகூட்டத்தில் இந்த சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக வற் வரி விதிக்கதீர்மானிக்கப்பட்டது.

அதேபோல், தனிப்பட்ட வருமானம் மீதான வரியற்ற எல்லைகளை அவ்வண்ணமேதக்க வைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில், இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர்வரியையும் (Value Added Tax ) செஸ் வரியையும் நீக்குவதற்கான இணக்கமும்எட்டப்பட்டிருந்தது.

எமது நாட்டு வியாபாரிகளுக்கு வெற் வரியை அறவிடுவதில் கடினமான காலகட்டம் ஏற்படுகிறது. இதனால் வற் வரியின் ஊடாக வர்த்தகர்களுக்கு அவசியமானபணப் புழக்கத்தை விரைவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அதனை நீக்குவதற்கான யோசனையொன்றுகொண்டுவரப்பட்டிருந்தது.

உழைக்கும் போது செ லுத்தும் வரி எல்லை அதிகரிப்புமூன்றாவது மீளாய்வைஆரம்பிக்கும் வேளையில் எமது நாட்டின் தொழில்வான்மையாளர்மீதுவிதிக்கப்பட்டிருந்த உழைக்கும் போது செ லுத்தும் வரியை குறைக்கதீர்மானிக்கப்பட்டது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம், வைத்தியர்களின் சங்கம், வங்கிமுகாமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பெருமளவானோர் இந்த உழைக்கும் போதுசெ லுத்தும் வரி (PAYE) தொடர்பில் அதிருப்தியில் இருந்தனர்.

இது தொடர்பில் நாம் கலந்துரையாடி உழைக்கும் போது செலுத்தும் வரிஎல்லையை ஒருஇலட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சங்களாகஅதிகரித்துள்ளோம். அதேபோல், நூற்றுக்கு ஆறுவீதத்திற்குள் அடங்கும்வகையில் தனிநபர் வருமான வரியின் முதல் தொகுதியை, 5

இலட்சத்திலிருந்து 10 இலட்சம் வரையில் அதிகரிக்கும் வகையில் திருத்தம்செய்ய எம்மால்முடிந்துள்ளது.

அதனால் ஒன்றரை இலட்சம் மாதச் சம்பளம் பெறுவோர் வரியிலிருந்து 100 வீதம்விடுவிக்கப்படுவர். 2 இலட்சம் சம்பளம் பெறுவோர் 71 வீதம் வரியிலிருந்துவிடுவிக்கப்படுவர்.இரண்டரை இலட்சம் சம்பளம் பெறுபவரின் வரி 61 சதவீதத்தினால் விடுவிக்கப்படும். 3 இலட்சம்சம்பளம் பெறுவோர் 47 வீதம்வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். மூன்றரை இலட்சம் சம்பளம்பெறுவோர் 25.5 வீதம் வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். அதனால் அதிகவருமானம்பெறுவோருக்கு குறைந்த சலுகையும், குறைந்த சம்பளம் பெறுவோர்அதிக சலுகையும் கிடைக்கும்வகையில் உழைக்கும் போது செ லுத்தும் வரி(PAYE) இனை குறைத்துக்கொள்ள எம்மால்

முடிந்துள்ளது.

யோகட் மற்றும் பால்சார் உற்பத்திகள் மீதான வெட் வரி நீக்கம்எமதுபிள்ளைகளின் போஷாக்கு குறைப்பாடு தொடர்பிலான பிரச்சினை குறித்துசிறப்பு கவனம்செலுத்தியுள்ளோம். கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும்யோகட் போன்ற உற்பத்திகளுக்கு

வற் வரி விதிக்கப்பட்டிருந்தது. அதனால் மூன்றாவது மீளாய்வில் எமது நாட்டில்உற்பத்திச்செய்யப்படும் பால் சார் உற்பத்திகளின் மீதான பெறுமதி சேர் வரியைகுறைக்க வேண்டும் என்றஇணக்கப்பாட்டினை எட்டியுள்ளோம். கடந்தஅரசாங்கம் இரண்டாவது மீளாய்வுக் கூட்டத்தில் 30சதவீத ஏற்றுமதிச் சேவை வரியை 15 சதவீதமாக குறைப்பதற்கான இணக்கம் காணப்பட்டது.

சேவை ஏற்றுமதிக்கு 15 சதவீத வரியென்பது சர்வதேசத்திலும்ஏற்றுக்கொள்ளப்பட்டதரநிலையாகும். அந்த அளவில் வரியைகுறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது.அதேபோல் தடுத்துவைக்கும் வரி(Withholding Tax) இனை ஐந்து சதவீத்திலிருந்து பத்துசதவீதமாகஅதிகரித்துக்கொள்ள இணக்கம் எட்டப்பட்டது.

முதியவர்கள், ஓய்வூதியம் பொறுவோர், ஒருதொகை பணத்தை வைப்பிலிட்டுஅந்த வட்டியில் வாழ்கிறார்கள். அவ்வாறானவர்கள் மாதம்ஒன்றரைஇலட்சத்துக்கும் அதிகமான வரியை பெற்றால் மட்டுமே அவர்கள் வரிவிதிப்புக்குள்உள்வாங்கப்படுவார்கள்.

அதனால் இறைவரித் திணைக்களத்துக்குள் எந்தவொரு பிரஜையும்தான்குறித்ததொரு வரிக்கு உரித்தானவர் அல்லவென நினைக்கும் பட்சத்தில், அவர்கள் உள்நாட்டுவருமான வரி திணைக்களத்திற்குச் சென்று தமது வரிதொடர்பில் தகவல்களை வழங்கி வரி விதிப்பை தவிர்த்துகொள்ள முடியும்.

அதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தனியான பிரிவொன்றுஉருவாக்கப்படும். தமதுவரி நிலைமை குறித்து தெளிவு பெற முடியும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாதாந்தம் பணத்தைவைப்பில் வைத்து வருமானம்பெறுவோருக்கு நிவாரணம்வழங்குவதே இதன்நோக்கமாகும்.அவ்வாறானவர்களுக்கு விரைவான ஆலோசனைகளைவழங்குவதற்கான நிலையங்களைகொழும்பிலுள்ள தலைமையகத்திலும், நாடளாவிய ரீதியிலுள்ள அலுவலகங்களிலும் ஸ்தாபிக்க தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளியோம். அதனால் எமதுவரி வலையைவிஸ்தரிப்பதற்கான நோக்கமே அன்றி, குறைந்த வருமானம் ஈட்டுவோருக்குமேலதிகவரியினையினை விதிப்பதற்கான தேவை ஏற்படாது.

வாகனச் சந்தையை கட்டம் கட்டமாக திறந்து விடுவது குறித்து கவனம்வாகனச்சந்தையை கட்டம் கட்டமாக திறந்து விட வேண்டும். ஏனென்றால் அதனுடன்இணைந்ததொழிற்துறையொன்றுள்ளது. அதனுடன் தொடர்புள்ளதொழில்முனைவோர் உள்ளனர். நீண்ட

காலத்திற்கு வாகன சந்தையை தடுத்து வைக்க முடியாது. அதனால் 3 கட்டங்களில் இந்த வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளோம். பயணிகள் போக்குவரத்து பஸ் மற்றும் விசேட தேவைகளுக்கு பயன்படுத்தும்வாகனங்கள் என்பவற்றை கடந்த 14 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்குஏற்ற வகையில் திறந்து விட்டுள்ளோம். எதிர்வரும் பெப்ரவரி தொடக்கம் தனியார்

வாகன இறக்குமதி குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.

இதனால் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படும் என யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.மத்திய வங்கியுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தி இந்த வாகனஇறக்குமதியினால்வெளிச்செல்லும் டொலரின் தொகை தொடர்பில் மதிப்பீடுசெய்துள்ளோம். அது எந்தளவிற்கு எமது பொருளாதாரத்திற்கு தாங்கக்கூடியதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்.

எமது பொருளாதாரத்தை மீளமைக்க வேண்டுமானால் இந்த வாகன சந்தையைதிறந்து விட வேண்டும்.அதனால் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து இந்தவாகன சந்தையை திறந்து விடுகிறோம். ஏனென்றால் இது முக்கியமானது எனநாம் கருதுகிறோம்.

பராட்டே சட்டம் சலுகை நீடிப்பு பராட்டே சட்டம் 2024 டிசம்பர் 15 ஆம் திகதிமுதல் முடிவுக்கு வருகிறது. ஆனால், சிறு மற்றும்

மத்திய தர தொழில்முனைவோர் இன்னும் வழமை நிலைக்குத் திரும்பவில்லை. எனவே அவர்களுக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும்.

அதில் 99 வீதமானவர்கள் 25 மில்லியனை விட குறைவாக கடனைபெற்றவர்களாவர். அதனால் பராட்டே சட்டம் முழுமையாகஇடைநிறுத்தப்பட்டிருப்பதால் வங்கிக் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்படவாய்ப்புள்ளது. ஏனென்றால் அவர்களிடம் இருப்பதும் மக்களின் வைப்புப்பணமாகும். அது தவிர வேறு வழியில் வங்கிக் கட்டமைப்புக்கு நிதிகிடைப்பதில்லை. எனவே மக்களின் வங்கிக் கட்டமைப்பிலுள்ள நிதியின்பாதுகாப்பு தொடர்பிலும் உத்தரவாதம் வழங்க வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் பல நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தன. அதன் பாதிப்புபணிப்பாளர் சபையினரையோ வங்கித்துறையினரையோ சென்றடையவில்லை. வைப்பாளர்கள் தான் அதன் பாதிப்பை அனுபவித்தனர். பாரியளவில் நிதிநிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததில் வைப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இன்றும் ஈடிஜ போன்றவற்றில் பணம்வைப்புச் செய்தோர் பெரும் வேதனையுடன் உள்ளனர்.

இவ்வாறு பல நிதி நிறுவனஙகள் வீழ்ச்சியடைந்ததால் வைப்பாளர்களும்பொதுமக்களும் தான் பாதிக்கப்பட்டனர்.அதனால் நாம்

வங்கிக் கட்டமைப்பை பாதுகாப்பது மற்றும் சிறு மத்திய தொழில்முனைவோரைபாதுகாப்பது ஆகிய இரண்டையும் சமமாக கருத்திற் கொள்ள வேண்டும். அதன்படி பராட்டே சட்டத்தை 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை சுமார் மூன்றரைமாதங்கள் நீடிக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

வங்கி மற்றும் கடன் பெற்றோர் இடையில் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்புமேற்கொள்ள டிசம்பர் 31 வரை காலஅவகாசம் வழங்குவோம். அதில் செலுத்தவேண்டிய வட்டி தவிர கடன் தொகை 25 மில்லியனுக்குக் குறைவான கடனைமறுசீரமைக்க 2025 டிசம்பர் 15 வரை கால அவகாசம் வழங்குவதற்கு நாம் ஒருதிட்டத்தை தயாரித்துள்ளோம்.

இந்த மறுசீரமைப்பிற்கு அவர்கள் தயாரா என்பது தொடர்பில் மார்ச் 31 ஆம் திகதிவங்கிகளுக்கு அறிவிக்க முடியும். வங்கிகளும் கடன் பெற்றோரும் கலந்துரையாடிமுடிவு எடுக்க 31 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளது. தான் செலுத்தவேண்டிய கடன் தொடர்பில் மறுசீரமைப்பு திட்டமொன்றைத் தயாரிக்க முடியும். 99 வீதமான தொழில்முனைவோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

செலுத்த வேண்டிய வட்டி மற்றும் கடன் தொகை 25 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டியோர் மார்ச் 31 ஆம் திகதி மறுசீரமப்புத் திட்டத்திற்கான தமது விருப்பத்தை வங்கிகளுக்குமுன்வைக்க முடியும். புதிய மறுசீரமைப்பிற்கு 2025.09.15 ஆம் திகதி வரை மூன்றுமாத கால அவகாசம் வழங்குவோம். வங்கிக்கும் கடன் பெற்றோருக்கும் கடன்மறுசீரமைப்பு திட்டம் பற்றி கலந்துரையாட 9 மாத காலம் உள்ளது.

செலுத்த வேண்டிய கடன் தொகை தவிர 50 மில்லியனுக்கு மேற்பட்ட கடன்பெற்றோரின் கடன் மறுசீரபைப்பிற்கு 2025.06.15 வரை 6 மாத கால அவகாசம்வழங்குகிறோம். அவர்களும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது கடன்மறுசீரமைப்புத் திட்டத்திற்கான உடன்பாட்டை வங்கிக்கு அறிவிக்க வேண்டும். வங்கிக்கும் அவர்களுக்கும் இடையில் ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னர்

மறுசீரமைப்புத் திட்ட உடன்பாடு எட்டப்பட வேண்டும்.

அதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பாதுகாப்பையும்வங்கிகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டே இந்தத் திட்டத்தைத்தயாரித்துள்ளோம். இது தொடர்பான உடன்பாட்டிற்கு நாம் வந்துள்ளோம்.

இந்தப் பொருளாதார நெருக்கடி நிலையில் எமது பொருளாதாரத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை. அவர்கள் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டனர். அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அவர்கள்குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கஎதிர்பார்க்கிறோம்.

அதற்கு முன்னர் இந்தப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய சிலசட்டங்கள் உள்ளன. ஏப்ரல் மாதத்தில் இருந்து செயற்படுத்துவதாக இருந்தால்அதற்கு முன்னர் அதனைச் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அதனால் சிலவற்றைநாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். மேலதிகமாக நான் இந்தவிடயத்தை முன்வைக்கிறேன். சிலவற்றுக்கு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

சிலவற்றுக்கு அவசியமில்லை.அவை ஏற்கெனவே செயற்படுத்தப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவோருக்குஇதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவை ஒக்டோபர்மாதம் முதல் 3000 ரூபாவினால்அதிகரித்தோம்.பொருளாதார நெருக்கடிநிலையுள்ள சூழலிலும் அவர்களுக்கு வாழ்வதற்கு கடினமான நிலை உள்ளது.

விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 25 ஆயிரம் ரூபா வரை பசளைநிவாரணத்தைஅதிகரித்தோம்.சில இடங்களில் இந்த பணம் கிடைப்பதில் தாமதம்இருப்பதாகதகவல் கிடைத்துள்ளது. நிதி அமைச்சுடன் பேசி எந்தத் தாமதமும்இன்றி அந்த நிவாரணத்தை

விவசாயிகளுக்கு வழங்க திட்டம் தயாரித்துள்ளோம். இது தவிர விவசாயிகளுக்குஎரிபொருள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

கஷ்டநிலையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாகொடுப்பனவுபொருளாதார நெருக்கடியினால் பாரிய தாக்கம் மாணவர்களுக்குஏற்பட்டுள்ளது. சிலர் மேலதிகவகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர். மேலதிக புத்தகங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர்.

தேவையான உபகரணங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர். இது எந்தவகையிலும் உகந்த நிலைமையல்ல. வரவு செலவுத்திட்டத்தில் அவர்கள் குறித்துகவனம் செலுத்தும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க உள்ளதோடு இந்த வருடஇறுதிக்குள் அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும்பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவுசெய்வதற்கு 6000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்போம்.

அஸ்வெசும பயனாளர்கள் தெரிவு செய்கையில் சரியாக தெரிவு நடந்ததா என்றகேள்வி கிராமங்களில் எழுப்பப்படுகிறது. அஸ்வெசும பெற தெரிவுசெய்யப்படவோ பிள்ளைக்கு பாடசாலைக் கல்விக்கான கொடுப்பனவுக்கு தெரிவுசெய்யப்படவோ இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதனால் அஸ்வெசும திட்டத்திற்கு உள்வாங்கப்படாத ஆனால் நிவாரணம்வழங்கப்பட வேண்டிய பிள்ளைகளை தெரிவு செய்து அடுத்த பாடசாலை தவணைஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த 6000ரூபா கொடுப்பனவை வழங்கநடவடிக்கை எடுப்போம்.

அடுத்து விசேடமாக அஸ்வெசும 4 கட்டங்களாக செயற்படுத்தப்பட்டன. அதிலுள்ள 8 இலட்சம் பேர் டிசம்பர் 31 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்தில்இருந்து அகற்றப்பட இருந்தனர். அந்த 8 இலட்சம் பேருக்கும் நிவாரணம்வழங்குவதை மார்ச் 31 வரை 3 மாதத்தினால் நீடித்துள்ளோம். இரண்டாவதுகுழுவை 2025 டிசமர்பர் 31 வரை ஒருவருடத்தினால் நீடித்துள்ளோம்.

அதே போன்று அஸ்வெசும பெறுவோருக்கும் பெறாதோருக்கும் இடையில்கிராமங்களில் பிரச்சினை உள்ளது. இதனை

மீளமைக்க வேண்டும். பழைய கட்டமைப்பின் கீழ் தான் முன்னர் மீளமைப்புநடந்தது. அது வெற்றிகரமாக நடந்ததா என்பதை கிராமங்களில் உள்ளோர்அனுபவிக்கின்றனர்.

அந்தக் கட்டமைப்பின் ஊடாகப் பெறும் தகவல்கள், கிராம உத்தியோகஸ்தரும்சமுர்த்தி உத்தியோகஸ்தரும் அபிவிருத்தி உத்தியோகஸ்தரும் சிலவேளை சமூகசேவை உத்தியோகஸ்தரின் ஒத்துழைப்புடன் மீள ஆராய்ந்து தற்பொழுதுஅஸ்வெசும கிடைக்காத ஆனால் நிவாரணம் கிடைக்க வேண்டியவர்களைமீண்டும் தெரிவு செய்து அடுத்த ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு அஸ்வெசுமவழங்க நடவடிக்கை எடுப்போம்.

அதே போன்று வங்கியூடாகத்தான் அஸ்வெசும வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. பொதுவாகவங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியாத காரணத்தினால்ஒன்றரை வருடங்களாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. 67 ஆயிரம் குடும்பங்கள் இதில் அடங்கும்.

அஸ்வெசும் பெற தகுதி பெற்றும் ஆனால் அந்தப் பயனைப்பெற வங்கிக்கணக்குக் கணக்கு ஆரம்பிக்க அடையாள அட்டையோ அடையாள அட்டை பெறபிறப்புச்சான்றிதழோ பெற முடியாத நிலையை அந்தக் குடும்பங்கள்எதிர்கொண்டுள்ளன. ஆட்சியாளர்கள் மிக நெருக்கமாக அவதானித்து தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் அல்லவா இவை.

ஆனால் ஒன்றரை வருடங்களாக கருத்திற் கொள்ளாமல் விட்டனர்.மத்தியவங்கியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அடையாள

அட்டையின்றி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க அவகாசம் வழங்க நாம் முடிவுசெய்துள்ளோம்.

அதனால் அந்த அனைவருக்கும் நிலுவைத் தொகையுடன் அந்த பயனை வழங்கநடவடிக்கை எடுப்போம். சில விடயங்களை வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர்பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். சிலவற்றை பாராளுமன்றத்தில்நிறைவேற்ற வேண்டும். மார்ச் 21 ஆம் திகதியளவில் வரவு செலவுத்திட்ட விவாதம்நிறைவடைய இருக்கிறது.

அதன் பின்னர் சட்டத்தை நிறைவேற்ற முயன்றால் இதனை ஏப்ரல் மாதம் வழங்கமுடியாது போகும்.இந்தப் பயன்களை துரிதமாக வழங்கும் வகையில் இவற்றைவிரைவாக வர்த்தமானியில் வெளியிட்டு அடுத்த ஜனவரியில்பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் வற் வரிதிருத்தப்பட வேண்டும். அஸ்வெசும சட்டத்தில் பல திருத்தங்கள் உள்ளன. இந்தத்திருத்தங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனஎதிர்பார்க்கிறோம் என்றார்.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

SUB EDITOR December 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article டிசம்பர் 25 – டிசம்பர் 27 வரை வடக்கு, கிழக்கில் மிதமானது முதல் கன மழை – நாகமுத்து பிரதீபராஜா –
Next Article கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?