By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் டக்ளஸ் தேவானந்தா
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் டக்ளஸ் தேவானந்தா
இலங்கைச் செய்தியாழ்ப்பாணம்

1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் டக்ளஸ் தேவானந்தா

Last updated: 2020/08/23 at 1:57 AM
Published August 23, 2020 643 Views
Share
3 Min Read
SHARE

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பதவியேற்றதை தொடர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

முன்பதாக 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கையின் வடபுலமான யாழ்ப்பாணத்தில் பிறந்த டக்ளஸ் தேவானந்தா, தனது கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றிருந்தார்.

ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகால போராளிகளில் முக்கிய ஒருவராக திகழ்ந்ததுடன் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தளபதியாகவும் டக்ளஸ் தேவானந்தா விளங்கினார். 

பின்னாளில் ஒரு சிலரின் தவறான வழிநடத்தல்களால் ஆயுதப் போராட்டம் திசைமாறி சென்றமை யால் 1987 களில் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறினார்.

இந்நிலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதற்தடவையாக யாழ்-கிளிநெச்சி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன் றத்தை பிரதிநிதித்துவம் செய்தார்.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் , 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தல், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளு மன்ற தேர்தல் ஆகியவற்றில் போட் டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாகவும் வெற்றிபெற்று தமிழ் மக்களின் தோற்றடிக்கப்பட முடியாத ஏக பிரதிநிதியாக பாராளுமன்றுக்கு சென்றார் டக்ளஸ் தேவானந்தா. 

இக்காலப்பகுதிகளில் பல்வேறு அமைச்சுக்களை பொறுப்பேற்று தமிழ் மக்களின் துயர் நிறைந்த காலங்களில் பெரும்பணியாற்றி வருவதுடன் நல்லிணக்கம் இன நல்லுறவு போன்றவற்றின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்துவருகின் றார். தமிழ் மக்களின் ஏக அரசியல் தலைவராக மட்டுமல்லாது தென்னிலங்கை பெரும்பான்மை மக்களினதும் நம்பிக்கைக்குரியவராகவும் காணப்படுகின்றார்.

குறிப்பாக 2000 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து கலாசார அமைச்சராக பொறுப்பேற்று அளப்பெரிய பணியாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2001 ஆண்டு தமிழ் விவகாரங்கள், வடக்கு மற்றும் கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக் கப்பட்டிருந்த யாழ்ப்பாண மக்களின் எதிர்காலத்துக்கு ஒளிவிளக்கை ஏற்றிவைத்தவராகவும் டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார்.

அத்துடன் 2005 ஆண்டு இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அன்று ஜனாதிபதியாக இருந்தபோது சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் அமைச்சராகவும் அதன்பின்னர் யுத்தம் நிறைவுற்று நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்ட பின்னரான காலப்பகுதியில் 2010 ஆம் ஆண்டின் அமைச்சரவையில் பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறு நிறுவன மேம்பாடு அமைச்சராகவும் பொறுப்பேற்று தமிழ் மக்களுக்கு அளப்பெரிய பணியாற்றியுள்ளதுடன் இன்று வடபகுதியில் காணப்படும் எண்ணற்ற அபிவிருத்திகள் அனைத்துக்கும் ஏக உரித்தாளராகவும் காணப்படுகின்றார்.

இதன் பின்னர் 2019 ஆண்டு இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிப தியானதும் அவரது தலைமையில் உருவான காபந்து அரசில் கடற் றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராகவும் பெறுப்பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2020 ஆண்டு நடந்துமுடிந்த தேர்தலில் தொடர்ந்து ஏழாவது தடவையாக தமிழ் மக்களின் தோல்வி காணாத தமிழ் தலைவராக பாராளுமன்றம் சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா, மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல் மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You Might Also Like

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

SUB EDITOR August 23, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
Next Article படகுப் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுமா?
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?