அரசு சேவையில் 18,853 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கானமுன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத்தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றுஅமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (ஏப்ரல்08) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில்உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, கொவிட்-19 தொற்றுநோய், அண்மையஅரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ளவேலையின்மை விகிதத்தைக் கருத்தில் கொண்டு, நிதியமைச்சர் என்ற முறையில்ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வேலையற்ற பட்டதாரிகள் மற்றும்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக 2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியதாகத் தெரிவித்தார்.
அதன்படி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களின் உத்தரவுகளின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.