110 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால்மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன்வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைதுகைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (ஒக்.22) குறித்த கைதுநடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர் இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள்கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article