By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வெளிநாட்டவர் 120 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி – முச்சக்கர வண்டி சங்கம் எதிர்ப்பு
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > வெளிநாட்டவர் 120 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி – முச்சக்கர வண்டி சங்கம் எதிர்ப்பு
இலங்கைச் செய்தி

வெளிநாட்டவர் 120 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி – முச்சக்கர வண்டி சங்கம் எதிர்ப்பு

Last updated: 2025/08/06 at 4:47 PM
Published August 6, 2025 33 Views
Share
1 Min Read
SHARE

ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் கருமபீடம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். இதன் மூலம் இதுவரை 120 வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சுற்றுலாவை ஊக்குவித்து, சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்காக இந்த கருமபீடம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. எனினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

விசா காலத்தை அடிப்படையாகக் கொண்டு 2 முதல் 5 மாதங்களுக்குள் செல்லுபடியாகும் வகையில் தற்காலிக சாரதி அனுமதிகள் வழங்கப்படுகின்றன. நிரந்தர அனுமதிகள், வழக்கம் போல் வெரஹெர அலுவலகத்திலேயே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2025 ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 133,678 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 100,451 மோட்டார் சைக்கிள்கள், 20,535 கார்கள் மற்றும் பல இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் அடங்குகின்றன. வாகனப் பதிவு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றார் கமல் அமரசிங்க.

இதே நேரத்தில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் குரல் எழுப்பியுள்ளது. சங்கத்தின் பிரதிநிதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதால் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

“வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்களாகும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை,” என அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம், சுற்றுலாத்துறையில் உள்ளூர் சாரதிகள் எதிர்நோக்கும் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும், பலர் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த திட்டம் மூலம் அரசாங்கம் எதை நோக்கி செல்ல விரும்புகிறது? இது நியாயமா?” என கேள்வி எழுப்பிய அவர், இதனை அரசு மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது என வலியுறுத்தினார்.

You Might Also Like

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு

தீர்மானங்கள் பொருளாதாரத்திற்கு தீங்கின்றி எடுக்கப்படும்!

2024 உயர் தர மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு – 2025 பரீட்சைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை – மூன்றாம் தவணை ஒகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்.

விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

கம்பெனிகள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு!

அரச சேவையை நவீனத்துவமாக்க நிதி ஒதுக்கீடு-ஜனாதிபதி!!

SUB EDITOR August 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
Next Article விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு

August 8, 2025
இலங்கைச் செய்தி

தீர்மானங்கள் பொருளாதாரத்திற்கு தீங்கின்றி எடுக்கப்படும்!

August 8, 2025
இலங்கைச் செய்தி

2024 உயர் தர மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு – 2025 பரீட்சைக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

August 7, 2025
இலங்கைச் செய்தி

இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை – மூன்றாம் தவணை ஒகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்.

August 7, 2025
இலங்கைச் செய்தி

விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

August 6, 2025
இலங்கைச் செய்தி

கம்பெனிகள் (திருத்த) சட்டம் நடைமுறைக்கு!

August 6, 2025
இலங்கைச் செய்தி

அரச சேவையை நவீனத்துவமாக்க நிதி ஒதுக்கீடு-ஜனாதிபதி!!

August 6, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?