யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் நேற்றிரவு (ஜூன் 21) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றகொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன்தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மூவரும் இலங்கை – தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாகஇந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவேளை கடலில் வைத்துகடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளானர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தலைமன்னார் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்