வாகன இறக்குமதி வரிகள் மீதான கூடுதல் கட்டண அறவீடு நீடிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளது. 

நாளை (15.08) வரை விதிக்கப்பட்டிருந்த இந்த 50% கூடுதல் கட்டணம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு இந்நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த மே மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கடன் கடிதங்கள் திறக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

26-6a7f108494030.webp.jpg

Share this Article
Leave a comment