By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து ஐ.நா பிரதிநிதி கருத்து!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து ஐ.நா பிரதிநிதி கருத்து!
இலங்கைச் செய்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து ஐ.நா பிரதிநிதி கருத்து!

Last updated: 2023/08/31 at 7:05 PM
Published August 31, 2023 309 Views
Share
2 Min Read
SHARE

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார்

அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் -தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாத வேதனையை அனுபவித்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் திரும்புகின்றன.

இந்த தினம் இலங்கையில் ஆழமான பிரதிபலிப்புகளை கொண்டுள்ளது இங்கு பல வருடங்களாக பல குடும்பங்களும் சமூகங்களும் நிச்சயமற்ற தன்மை மற்றும் துயரத்தை எதிர்கொண்டுள்ளதுடன் பதில்கள் அற்ற கேள்விகளின் நிழல்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படல் என்பது நாட்டின் வரலாற்றின் துயர்படிந்த கறையை விட்டுச்சென்றுள்ளது,நிச்சயமற்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. அவர்களின் அன்புக்குரியவர்கள் இல்லாத -நிச்சயமாக இல்லை என கருதமுடியாத நிலை காணப்படுகின்றது.

கடந்த தசாப்தத்தில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படாத நிலையில் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலையை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை அறிவதற்கு இலங்கையின் குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

பதில்களுக்கான அவர்களின் தளர்ச்சியற்ற நீடித்த தேடல்கள் அவர்கள் மேலும் பழிவாங்கப்படும்,அச்சுறுத்தப்படும் களங்கப்படுத்தப்படும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

சமீபவருடங்களில் இலங்கை பலவந்தமாக காணாமல்போதலின் பாரம்பரியத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.2015 இல் ஐசிபிபிஈடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது – காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்படுத்தியது – இவை மைல்கற்களாகும்.

காணாமல்போனவர்கள் குறித்து காணாமல்போனவர்கள் அலுவலகம் பெற்றுக்கொண்டுள்ள வெளியிட்டுள்ள முறைப்பாடுகள் நீதியை வழங்குவது தொடர்பில் எற்பட்டுள்ள முன்னேற்றங்களிற்கான எங்களின் அளவுகோல்களாக காணப்படுகின்றன.

எனினும் உண்மை நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றிற்கான பாதிக்கப்பட்டோரின் உரிமை தொடர்பில் இன்னமும் அதிகளவு செயற்பாடுகள் அவசியமாக உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்தவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம், துயரத்தை எதிர்கொண்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

உண்மையை நிலை நாட்டுவது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் குடும்பத்தவர்களுக்கு மிகவும் அவசியமான விடயம்,இதன் மூலம் மாத்திரமே காயங்களை ஆற்றும் நடவடிக்கை ஆரம்பமாக முடியும்,நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பமாக முடியும்.

ஐக்கியநாடுகள் வலிந்து காணாமலாக்கப்படுதலினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களுக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வெளியிடுவதுடன் உண்மை நீதி நல்லிணக்கத்திற்காக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டுள்ள போராட்டங்களிற்கும் தனது ஆதரவை வெளியிடுகின்றது.

நாங்கள் இன்றைய நாளை குறிக்கும் அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது கடந்த காலத்தின் ஒரு விடயமாக மாறுவதை உறுதி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்துக்கொள்வோம்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுப்போம்,நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம்,எந்த குடும்பம் நிச்சயமற்ற நிலையில் வாழத எதிர்காலத்தை உருவாக்குவோம்.

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது.

You Might Also Like

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

Anarkali August 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கையூட்டல் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!
Next Article காரைநகரில் முன்பள்ளி மாணவர்களுக்கு இணைய வசதி தொடர்பான விழிப்புணர்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?