By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வட்டுக்கோட்டை யாழ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரத்தை கோலாகலமாக நடத்த ஏற்பாடு!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வட்டுக்கோட்டை யாழ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரத்தை கோலாகலமாக நடத்த ஏற்பாடு!
யாழ்ப்பாணம்

வட்டுக்கோட்டை யாழ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரத்தை கோலாகலமாக நடத்த ஏற்பாடு!

Last updated: 2023/07/11 at 1:06 PM
Published July 11, 2023 525 Views
Share
3 Min Read
SHARE

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமான பற்றிக்கோட்ட செமினரியினதும் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரம் ஜூலை 15 ஆம் திகதி முதல் ஜூலை 22 ஆம் திகதிவரை கோலகலமாக இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பில் பழைய மாணவர் ஏற்பாட்டுக்குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823 ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக‌ வழங்கிய கல்விப் பணியினையும், சமூகப் பணியினையும் நினைவுகொள்ளல் – கொண்டாடுதல் – அவை குறித்துச் சிந்தித்தல் மற்றும் கல்லூரியின் எதிர்காலப் பயணம் குறித்துத் திட்டமிடும் வகையிலுமான‌ பழைய மாணவர் வார நிகழ்வுகள் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 22ஆம் திகதிவரை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்திலே மிகவும் கோலாகலமான முறையிலே இடம்பெறவுள்ளன.

உலகம் முழுவதிலும் இருந்து வரும் கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வாகப் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன ஊர்தி – நடைபவனி எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 15) அன்று காலை 7 மணிக்குக் கல்லூரி வாசலில் இருந்து ஆரம்பமாகி, கோட்டைக்காடு, அராலி, செட்டியார்மடம், துணைவி, நவாலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியினை வந்தடையும்.

16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நன்றிகூரல் ஆராதனை தென்னிந்தியத் திருச்சபையின் யாழ். ஆதீனத்தின் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பேராலயத்திலே முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கசூரினாக் கடற்கரையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி அன்றைய பொழுதினைக் கழிப்பர்.

மறுநாள் ஜூலை 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூலை 22 வெள்ளிக்கிழமை வரை பிற்பகலிலே பழைய மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

திங்கட்கிழமை (ஜூலை 17) அன்று மாலை 4 மணியில் இருந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் தற்போது கற்கும் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் ஒட்லி மண்டபத்திலே இடம்பெறும்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) அன்று மாலை 6 மணிக்கு 1980களிலே கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் கல்லூரி மாணவர்களினால் உருவாக்கப்பட்ட “கல்லூரி வசந்தத்தில்” என்ற திரைப்படம் திரையிடப்படும்.

புதன்கிழமை (ஜூலை 19) மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பற்றிக்கோட்டா செமினரி, யாழ்ப்பாணக் கல்லூரி என்பவற்றின் வரலாறு, சிறப்பம்சங்கள், தற்காலத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி ஆற்றும் – ஆற்ற வேண்டிய பணிகள், கல்லூரியின் எதிர்காலத்துக்கான பாதைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துப் பகிர்வுகளும், பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் அருட்கலாநிதி வே. பத்மதயாளன், கல்லூரியின் அதிபர் திருமதி ருஷிறா குலசிங்கம், கல்லூரியின் முன்னாள் அதிபர் பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன், கல்லூரியின் ஆளுநர் சபைக்கான பழைய மாணவர்களின் பிரதிநிதி ரீ. எதிராஜ், சென் ஜோன்ஸ் தொழிற்பயிற்சி நிலையத்தின் (மட்டக்களப்பு) இயக்குநர் கலாநிதி. தர்சன் அம்பலவாணர், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் நிருவாக இயக்குநரும் முன்னாள் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபருமான திருமதி. ஷிராணி மில்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத்துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி கெங்காதரஐயர் சர்வேஸ்வரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

நிகழ்விலே கலந்துகொள்ளுவோர் பங்கேற்கும் திறந்த உரையாடல் ஒன்றும் பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும்.

வியாழக்கிழமை (ஜூலை 20) மாலை 6 மணி தொடக்கம் பழைய மாணவர்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்வுகள் ஒட்லி மண்டபத்திலே இடம்பெறும்.

சனிக்கிழமை (ஜூலை 22 ) 4 மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இடம்பெறும். ஜூலை 22 ஆம் திகதியுடன் பழைய மாணவர் வார நிகழ்வுகள் முடிவுக்கு வருகின்றன.

கல்லூரியின் முன்னாள் மற்றும் தற்போதைய நிருவாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், கல்வித் துறை சார்ந்த ஆர்வலர்கள் அனைவரினையும் இந்த நிகழ்வுகளிலே கலந்துகொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

தொடர்புகளுக்கு:
நிஷாந்தினி – 0770834132
செந்தூரன் – 0779599364
சதீஸ் – 0779587712

ஏற்பாட்டுக் குழு
பழைய மாணவர் வாரம்
யாழ்ப்பாணக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்
09 ஜூலை 2023

You Might Also Like

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

Anarkali July 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Next Article மன்னம்பிட்டி விபத்தால் சோகமயமான அக்கரைப்பற்று!- உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?