By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான பிந்திய தகவல்!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான பிந்திய தகவல்!
யாழ்ப்பாணம்

யாழ் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான பிந்திய தகவல்!

Last updated: 2023/09/14 at 10:43 PM
Published September 14, 2023 424 Views
Share
3 Min Read
SHARE

யாழ்ப்பாணம், பரமேஸ்வரா சந்தியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து 12 வயதுச் சிறுமி நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 12) சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியின் பேர்த்தி சிறுமிக்கு அதிகளவு மருந்து வழங்கிக் கொன்றுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம், பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் அறையில் இருந்து 12 வயதுச் சிறுமி பாத்திமா ஹிமா சடலமாக மீட்கப்பட்டார். அவரது பேர்த்தியாரான 53 வயதான நாகபூசணி சிவநாதனும் அந்த அறைலிருந்து அசாதாரண நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நாகபூசணி மன்னாரைச் சேர்ந்தவர். நாகபூசணியின் மகள் முஸ்லிம் நபரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்குப் பிறந்தவளே பாத்திமா ஹிமா.

பாத்திமா ஹிமாவின் தாயும், தந்தையும் முரண்பாட்டால் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் தாய் பிறிதொரு திருணம் செய்துவிட்டார். தந்தையும் திருகோணமலையில் வேறு திருணம் செய்துவிட்டார்.

பாத்திமா ஹிமாவை 2 வயது முதல் பேர்த்தியாரான நாகபூசணியே வளர்த்து வந்திருக்கின்றார். திடீரென சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா ஹிமாவின் தந்தை மகளைத் தான் வளர்க்கின்றேன் என்று கூறித் திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

சிறுவயதில் இருந்து பாத்திமா ஹிமாவை வளர்த்த நாகபூசணி இந்தப் பிரிவால் பாதிக்கப்பட்டார். தனது பேத்தியின் எதிர்கால வாழ்வு எவ்வாறு இருக்குமோ என்ற பயம் அவரைத் துரத்தியிருக்கின்றது. அது அவரை ஆபத்தான முடிவை நோக்கித் தள்ளியிருக்கின்றது.

கடந்த 2ஆம் திகதி திருகோணமலைக்குச் சென்ற நாகபூசணி, பாத்திமா ஹிமாவின் தந்தையிடம் மன்றாடிச் சிறுமியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்திருக்கின்றார். சிறுமியை மருத்துவர்களிடம் காட்டிச் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று அங்கு காரணம் கூறியிருக்கின்றார்.

கடந்த 9ஆம் யாழ்ப்பாணம் வந்த அவர்கள் பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். சிறுமியின் உளநலச் சிகிச்சைக்காக இங்கு வந்தோம் என்றும், அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளது என்றும் விடுதியில் தெரிவித்திருக்கின்றார் நாகபூசணி.

அங்கு வந்த மறுநாள் நாகபூசணி மட்டும் வெளியே சென்று வந்திருக்கின்றார். அதன்பின்னர் அவர்கள் வெளியே வரவில்லை.

நேற்று அறையில் இருந்து சிறிது துர்நாற்றம் கிளம்பியிருக்கின்றது. விடுதிப் பணியாளர்கள் கதவைத் தட்டியபோது பதில் கிடைக்கவில்லை. அறையின் ஒரு பகுதியில் உடைத்து உள்ளே பார்த்தபோது, படுக்கையில் இருவரும் அசைவற்றிருப்பதைப் பணியாளர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

கோப்பாய் பொலிஸார் சம்பவ இடததுக்கு வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தார். அவரது உடல் பழுதடைந்திருந்தது. நாகபூசணி அசாதாரண நிலையில் காணப்பட்டார். அவரது உடலில் அசைவுகள் தென்பட்டதை அடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை தேறியுள்ளது. தற்போது அவர் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெறுகின்றார்.

சிறுமியின் உடல் உடல்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான மருந்தொன்று சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

மருத்துவ மாதாக (Midwife) பணியாற்றிய அனுபவம் நாகபூசணிக்கு உண்டு. விடுதியில் இருந்து வெளியே சென்ற அவர், மருந்தகங்களில் தூக்க மாத்திரைகளையும், தனக்குத் தெரிந்த மருந்துகளையும் வாங்கியுள்ளார். அவற்றில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஊசி மூலம் ஏற்றும் மருந்தும் அடங்கியிருந்துள்ளது.

சிறுமிக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, ஆபத்தான மருந்தையும் செலுது்திய பின்னர், தானும் தூக்க மாத்திரைகளை அருந்தி, தனக்கும் மருந்தைச் செலுத்தியிருக்கின்றார் நாகபூசணி.

தனது பேர்த்தியின் எதிர்காலம் எவ்வாறு இருக்குமோ என்ற அச்சத்தில் – பேர்த்தியின் மீதான பாசத்தில் தவறான முடிவை எடுத்திருக்கிறார் நாகபூசணி. நாகபூசணி உயிர்தப்பியபோதும், துரதிஷ்டவசமாக பாத்திமா ஹிமாவின் உயிர் பிரிந்தது. தற்போது நாகபூசணி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்.

You Might Also Like

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

Anarkali September 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியிறக்கம் இன்று!
Next Article கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் பல தடையப் பொருட்கள் மீட்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025
யாழ்ப்பாணம்

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

July 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?