யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கு பலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலர் உட்பட சில பிரதேசசெயலகங்களின் செயலாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறவுள்ளனர்என்று தெரியவருகின்றது.
இதன்படி யாழ்ப்பாணம் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஆக கடமையாற்றியஸ்ரீமோகனன் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவிஉயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறீ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர்சத்தியசீலன் ஆகியோர் வடக்கு மாகாண சபைக்குப் பதவி உயர்வு பெற்றுச்செல்லவுள்ளனர்.
இதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி. நிவேதிகா கேதீசன் அஞ்சல் திணைக்களத்துக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.
வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) ஆக பதவி உயர்வு பெறவுள்ளார்.
இதேவேளை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், பருத்தித்துறை பிரதேசசெயலகங்களுக்குப் புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.