யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாகபொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே. ஏ. என். ரசீஹ குமார யாழ்ப்பாண மாவட்டஅரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (ஜூன்26) மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துகலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி மற்றும் காணி விடுவிப்பு தொடர்பாகவும்அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர்செல்வி உ.தா்சினி ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.