நாளை மறுதினம் (மே 06 ) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள்தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புக்கள்தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சிஅலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினரால் இன்றைய தினம் (மே04) கள ஆய்வு செய்யப்பட்டது.
இக் கள ஆய்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் போன்றவிடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் இ.சசீலன், தேர்தல்கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதாரம் அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச்செயலாளர் பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான க.ஸ்ரீமோகனன், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜே.ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவிதெரிவாட்சி அலுவலர்கள் இணைந்திருந்தனர்.