யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் விநோதமான சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (மே 24), யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளனர்.
இந்த குழந்தைகள், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த தாயார் மூன்று ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் உயிர்க்கொடியுடன் ஈன்றுள்ளார்.
தாயும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.