வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்துச் சிறைகளில் இருந்தும் 982 ஆண் கைதிகளும், 6 பெண் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்று (மே 5) 14 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள், தண்டனைக்காலம் நிறைவுறும் நாளை அண்மித்தவர்கள், தண்டப் பணம் செலுத்த வசதியற்று சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போன்றவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளுக்கான இந்தப் பொது மன்னிப்பு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.