யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இளையோருக்கான மிகப்பெரிய தொழிற்சந்தை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளையோருக்காக, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையம் 40 இற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு 2025 மார்ச் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெறும்.
இத்தொழிற்சந்தையில் தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், கணக்கியல்துறை, ஹோட்டல்கள், காப்புறுதித் துறை, ஆடைத் தொழிற்சாலைகள், பாதுகாப்பு சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, கணினித் துறை, தொழிற்பயிற்சி நெறிகள், ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் ஆகியவை கலந்து கொள்ளவுள்ளன.
மேலும், இந்நிறுவனங்கள் தங்களிடம் காணப்படும் 500இற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுக்காக நேர்முகத் தேர்வுகளை அன்றைய தினமே நடத்தவுள்ளன.
இளையோர்கள் தங்களது தகுதிகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இந்நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் தமக்குப் பொருத்தமான ஒரு வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய வாய்ப்பைப் பெறலாம்.
இவ்வியல்பான வாய்ப்பை பயன்படுத்தி, உங்கள் தொழில்துறைக் கனவை நிறைவேற்றுமாறு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: 0212219359