By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் தொல்பொருள் திணைக்கள பணிமனைகள் எதுவும் இல்லையாம்! வரலாற்றை திரித்த கடற்படை இப்படி விளக்கம்
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > யாழில் தொல்பொருள் திணைக்கள பணிமனைகள் எதுவும் இல்லையாம்! வரலாற்றை திரித்த கடற்படை இப்படி விளக்கம்
நெடுந்தீவு

யாழில் தொல்பொருள் திணைக்கள பணிமனைகள் எதுவும் இல்லையாம்! வரலாற்றை திரித்த கடற்படை இப்படி விளக்கம்

Last updated: 2023/03/20 at 1:38 PM
Published March 20, 2023 330 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டைக்கு அருகிலுள்ள தமிழ் பௌத்த எச்சத்தின் வரலாற்றை திரிவுபடுத்தி, இலங்கை கடற்படை தகவல் பதாகை நாட்டியுள்ளது. அங்கு நாட்டப்பட்டிருந்த தகவல் பதாகையை யாரோ அகற்றிவிட்டனர். 

யாழ்ப்பாணத்தில், தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிமனைகள் ஏதும் இல்லாத காரணத்தால் அறிவித்தல் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டது என்று கடற்படை விளக்கம் கூறியுள்ளது. 

வெடியரசன் கோட்டை 2007ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் தொல்பொருள் சின்னமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அருகில் சுமார் 50 மீற்றர் தொலைவில் தமிழ் பௌத்தத்துக்கான எச்சங்கள் 3 இடங்களில் காணப்படுகின்றன. அவை 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமே தொல்பொருள் சின்னங்களாக வர்த்தமானியிடப்பட்டன.

இந்த நிலையில் கடற்படையினரால், வெடியரசன் கோட்டைக்கு அருகிலுள்ள பௌத்த ஸ்தானத்துக்கு அண்மையாக சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல் பதாகை, வைக்கப்பட்டுள்ளது. அதில் வரலாற்றை திரிவுபடுத்தும் விதமான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘சிங்கள பிராகிருத மொழி எழுத்து இங்கு உள்ளதாகவும், சிங்கள – பெளத்தத்துக்குரிய எச்சம் காணப்படுவதாகவும்’ அந்தத் தகவல் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அது தவறானது என்றும் வரலாற்றை திரிபுபடுத்துவதாகவும், முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் சுட்டுக்காட்டுகின்றார்.

‘அங்கு காணப்படுபவை 14 – 15ஆம் ஆண்டு நூற்றாண்டுக்குரிய தமிழ் மொழியில் எழுகப்பட்ட கல்வெட்டுக்கள். சில தமிழ்ச் சொற்களை எழுது வதற்கு கிரந்த எழுத்துக்களைப் பயன் படுத்தியிருக்கின்றார்கள். கல்வெட்டு மூலாதாரத்லிருந்து அங்கு எழுப்பப்பட்ட பௌத்த ஸ்தானம் தமிழருக்குரியது என்பது தெரிய வருகின்றது’ என்று பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

இதேவேளை- அங்கு வைக்கப்பட்ட தகவல் பதாகையை தொல்பொருள் திணைக்களமே நட்டுள்ளதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொல்லியல் திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பனவும் அதனைத்தாம் வைக்கவில்லை என்று மறுத்துள்ளன.

இதற்கிடையில் இலங்கைக் கடற்படையினர், தாம் நட்டுள்ள அந்தத் தகவல் பலகையை அகற்ற வேண்டாம் என நெடுந்தீவு பிரதேச சபையிடம் கோரியுள்ளதாக தவிசாளர் நல்லதம்பி சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

முறையான அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, தகவல் பலகையிலுள்ள விடயங்கள் சரியானவையா என்று தொல்பொருள் திணைக்களத்திடம் உறுதிப்படுத்திய பின்னரே காட்சிப் படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை – கடற்படையின் பேச்சாளர் இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,

இலங்கை அரசாங்கத்தால் புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வர்த்தமானி அறிவித்தலில் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வெடியரசன் கோட்டையில், எந்த வொரு சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் கடற்படையால் முன்னெடுக்க முடியாது. வெடியரசன் கோட்டையில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த அறிவித்தல் பலகை சில தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளது. அதனை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. 

யாழ்ப்பாணத்தில், தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிமனைகள் ஏதும் இல்லாத காரணத்தால் அறிவித்தல் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப அறிவித்தல் பலகை வைக்கப்பட்டது. தற்போது சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் இந்த அறிவித்தல் பலகைகளை தமிழ் மொழியிலும் வைக்க ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.- என்று கூறியுள்ளார். (நனறி ஈழநாடு)



You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR March 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு தூய யூதாததேயு ஆலய திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி!
Next Article எமக்களித்த பொறுப்பை நிறைவேற்றி விடைபெறுகின்றோம் – ஊர்காவற்றுறை பிரதேச சபை தலைவர் நன்றி தெரிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?