By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மீற்றர் இல்லாத ஓட்டோக்களுக்கு ஓகஸ்ட் முதல் தடை! – யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > மீற்றர் இல்லாத ஓட்டோக்களுக்கு ஓகஸ்ட் முதல் தடை! – யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம்

மீற்றர் இல்லாத ஓட்டோக்களுக்கு ஓகஸ்ட் முதல் தடை! – யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Last updated: 2023/05/06 at 9:27 PM
Published May 3, 2023 365 Views
Share
2 Min Read
SHARE

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டணமானி (மீற்றர்) பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகள் மட்டுமே சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (மே 3) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது யாழ். மாவட்டச் செயலர் ஆ.சிவபாலசுந்தரன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் அதிகளவில் அறவிடப்படுகின்றன என்று தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதிநிதி, வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் முச்சக்கர வண்டிச் சேவை தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்புவது, அநாவசியமான கண்ணாடிகளைப் பொருத்துவது, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் சீரற்ற வகையில் பொருத்துவது போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.

பயணிகள் மற்றும் வீதியில் பயணிப்பவர்களை அச்சமூட்டும் வகையில் அதிக ஒலிகளை எழுப்பும் கருவிகளை முச்சக்கர வண்டிகளில் பொருத்துவதைத் தடை செய்தல் என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், முச்சக்கரவண்டிச் சாரதிகள் மரியாதைக்குரிய ஆடைகளை அணிவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் யாழ். மாநகரப் பகுதியில் சேவையில் ஈடுபடுவது பெரும் தொல்லையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டு முதலாம் இலக்க மோட்டார் வாகனச் சட்ட ஒழுங்குவிதி அதாவது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கு அமைய நாடு முழுவதிலும் முச்சக்கர வண்டிகளுக்கு உரிய கட்டண மீற்றர் பொருத்தப்பட்டு கட்டணம் அறவிப்பட வேண்டும்.

இது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறையில் இல்லை. மாவட்டத்தில் கட்டணங்கள் அதிகமாக உள்ளன என்று பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனால் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானிகளைப் பொருத்தும் நிறுவனத்தினரை அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடியபோது, ஒரு நாளைக்கு குறைந்தது 40 முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்த முடியும் என்று குறிப்பிட்டனர்.

போக்குவரத்து அதிகாரசபையின் கணக்கெடுப்பின்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் சேவையில் உள்ளன. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் 2 ஆயிரத்து 25 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் கட்டணமானி பொருத்த வேண்டும். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டணமானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது.

அத்தோடு தரிப்பிடங்களில் தரித்து நிற்பதற்கான அனுமதியும் இரத்துச் செய்யப்பட்டு, மீண்டும் பதிவுகளை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குரிய ஒழுங்குகளை யாழ். மாநகரசபையும் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று முச்சக்கர வண்டிச் சங்கமும் தெரிவித்துள்ளது என்று யாழ். மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

Anarkali May 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தையிட்டியில் காணி அபகரிப்புக்கு எதிராக திரண்ட மக்கள்!
Next Article லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திடீர் குறைப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?