By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு!!!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு!!!
இலங்கைச் செய்தி

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு!!!

Last updated: 2024/12/16 at 10:09 AM
Published December 16, 2024 166 Views
Share
3 Min Read
SHARE

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்குநான்கு வகையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டுமென்று நாங்கள்பரிந்துரைக்கிறோம்.

முதலாவது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவுள்ள பிரச்சினைகள். அவை வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, போதைவஸ்த்துப் பாவனைஎன்பனவாக அமையலாம்.

முதலில் அந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான தீர்வை வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆகவேஇவற்றில் இருந்து நாம் மக்களை மீட்டெடுக்க வெண்டும்.

இப்பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரைக்கும் வடக்கு, கிழக்கு மற்றும்தெற்குக்கென தனித்தனியாக இருந்து வந்துள்ளது. எனவே முதலாவதாக இந்தவேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படும்.

இரண்டாவதாக, தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் தனித்துவமான பிரச்சினை. தமிழர் என்ற காரணத்தினால் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, மொழி ரீதியிலான பாகுபாடு போன்றவற்றில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கதேவையான நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக 99 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்குமாகாணத்தில், யாழ்ப்பாணத்தில், தமிழ் பொலிஸ் உயரதிகாரிகளோ, குறைந்தபட்சம் தமிழ் பேசும் நிலைய பொறுப்பதிகாரி கூட யாழ். மாவட்டத்தில்கிடையாது. இது போன்ற பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன.

அத்துடன் இன்று அரசாங்கத் திணைக்களங்களுக்குச் சென்று தமிழில்முறைப்பாடு கடிதமொன்றைக் கூட வழங்க முடியாத நிலையே உள்ளது.

தமிழர்கள் என்ற உணர்வோடு, அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.

இவையனைத்தும் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் தனித்துவமான பிரச்சினைகள். எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் நாம்தெளிவாகவுள்ளோம். அவற்றை தீர்ப்போம்.

மூன்றாவதாக மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் நடத்துவோம். மாகாணசபை தேர்தல் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களைகூறுகின்றார்கள். அவை ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்கள் ஆகும்.

ஏனெனில் நாம் எமது கொள்கை விளக்க உரைகளில் நாம் மிகத் தெளிவாககுறிப்பிட்டுள்ளோம். மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் அதன் ஊடாக அதன்பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள மாகாண சபை தேர்தலை நாங்களும்உள்வாங்கிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் மாகாண சபை தேர்தலும்நடத்தப்படுகின்றது.

நான்காவதாக புதிய அரசியல் அமைப்பாகும். இந்த நாட்டில் உருவாக்கப்பட்டபுதிய அரசியலமைப்பு சட்டமூலங்கள் அனைத்தும் இதுவரைக்காலமும் ஆட்சிசெய்த ஆளுந்தரப்பினரின் விருப்பமாகவே இருந்திருக்கின்றதே தவிரமக்களுடைய விருப்பம் அல்ல.

எனவே மக்களுடைய விருப்பத்தை உள்வாங்கி ஒரு அரசியல் அமைப்புஉருவாக்கப்பட வேண்டும்.

அதற்காக நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட நாட்டில்வாழும் அனைத்து இன மக்களின் புத்திஜீவிகளின் கருத்துக்களை உள்வாங்கிநீண்டு நிலைக்கக் கூடிய ஒரு நிரந்தரமான அரசியல் அமைப்பொன்றே எமக்குதேவையாகவுள்ளது.

அதன்படி, 2015ஆம் 2019ஆம் ஆண்டுகளில் விவாதிக்கப்பட்டு இன்றுகைவிடப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பை கவனத்திற்கொண்டு அதில்மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை மக்களின்அரசியலமைப்பாக உருவாக்குவதே எமது நோக்கமும் அணுகுமுறையுமாகும் எனகுறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

SUB EDITOR December 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்
Next Article ஜனாதிபதிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?