நீண்டகாலமாக நடத்தப்படாமலிருக்கின்ற மாகாணசபை தேர்தலை அரசாங்கம்உடனடியாக நடத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல்வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய மாகாணசபைகளின் ஆயுள்காலம் 2014 செப்டம்பர்உடன்முடிவடைந்துவிட்டதை பவ்ரல் தனது அறிக்கையொன்றில்சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் பல காரணங்களிற்காக அரசாங்கங்கள் இதனைநடைமுறைப்படுத்தவில்லை,பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும்தேர்தலை நடத்துவதற்கான சட்ட நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லைஎன பவ்ரல் தெரிவித்துள்ளது.
மாகாணசபை தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் மக்கள் மத்தியிலும்சிவில் சமூகத்தினர் மத்தியிலும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன,எனதெரிவித்துள்ள பவ்ரல் இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது பிற்போடுவதுஜனநாயக கொள்கைகளை சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்குஉட்படுத்துவதாகவும்,அமையும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் எனஅறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேர்தல்களை நடத்தாமலிருப்பது அரசியலமைப்பு ஏற்பாடுகளை ஜனநாயகமரபுகளை மீறும் செயல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என பவ்ரல்குறிப்பிட்டுள்ளது.