By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மயிலத்தமடு சென்ற தமிழ் எம்.பிக்களை திருப்பி அனுப்பிய அம்பிட்டிய தேரர்!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மயிலத்தமடு சென்ற தமிழ் எம்.பிக்களை திருப்பி அனுப்பிய அம்பிட்டிய தேரர்!
இலங்கைச் செய்தி

மயிலத்தமடு சென்ற தமிழ் எம்.பிக்களை திருப்பி அனுப்பிய அம்பிட்டிய தேரர்!

Last updated: 2023/12/15 at 7:49 PM
Published December 15, 2023 379 Views
Share
2 Min Read
SHARE

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதிக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரை சிங்கள குடியேற்றவாசிகள் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் சொற்பிரயோகங்களுடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாதாக தெரிவிக்கப்படுகிறது.

கால்நடை மேய்ச்சல் தரையான மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மகாவலி அதிகாரசபையால் சட்டவிரோத சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றவாசிகளை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நீதிமன்றமும் கட்டளையிட்டும், சட்டவிரோத குடியேற்றவாசிகள் அங்கிருந்து நகரவில்லை.

குறிப்பிட்ட பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டி, பண்ணையாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தலும் ஈடுபட்டுள்ளனர்.

மேய்ச்சல்தரை உரிமைக்காக குரல் கொடுப்பவர்களின் மாடுகளை இலக்கு வைத்து சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்களும் பதிவாகி வருகிறது.

இந்த பின்னணியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மயிலத்தமடு, மாதவனை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும், முன்கூட்டியே தகவலறிந்த சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகள் வளமண்டி பாலத்தில் வீதித்தடைகளை ஏற்படுத்தி, பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அம்பிட்டிய சுமணரத்ன தேரர், அங்கு வந்து கடும்போக்கில் நடந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, கத்திக்கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார்.

இதையடுத்து, கஜேந்திரகுமார் தரப்பினர் மேற்கொண்டு நகராமல் பொலிசார் தடையேற்படுத்தியிருந்தனர்.

இந்த பயணத்துக்கு முன்னதாக, மயிலத்தமடுவுக்கு செல்வதற்கு கரடியனாறு பொலிசாரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று அனுமதி கோரியிருந்தனர். அதற்கு, கரடியனாறு பொலிசார் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றே, ஜனாதிபதி செயலாளரை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தார். இந்த நாட்டில் யாரும் எங்கும் செல்வதற்கு அனுமதியுண்டு என்றும், நீங்கள் மயிலத்தமடு செல்லலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பொலிஸ் உயர்மட்டத்திலிருந்தும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர் மயிலத்தமடு சென்ற போது, பொலிசாரால் வழிமறிக்கப்பட்டார். ஜனாதிபதி கடந்த ஒக்ரோபரில் எடுத்த தீர்மானத்தின்படி யாரும் அங்கு செல்ல முடியாதென பொலிசார் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, கஜேந்திரகுமார் ஜனாதிபதி செயலாளரை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தார். யாரும் உங்களை மறிக்க முடியாது என தெரிவித்த ஜனாதிபதி செயலாளர், உரிய தரப்பினரை தொடர்பு கொண்டு விட்டு, மீள அழைப்பதாக தெரிவித்திருந்தார். எனினும், அவர் மீண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பேற்படுத்தவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பலமுறை அழைத்த போதும், பதிலளிக்கவில்லை.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை அங்க காத்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர், மீண்டும் திரும்பி வந்தனர்.

You Might Also Like

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

Anarkali December 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
Next Article புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் இராணுவத்தினர்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

இலங்கைச் செய்தி

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

July 28, 2025
இலங்கைச் செய்தி

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

July 28, 2025
இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025
இலங்கைச் செய்தி

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

July 26, 2025
இலங்கைச் செய்தி

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

July 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?