யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணியின் பணியின்போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான அமைப்பிற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்றையதினம் (செப். 20) துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்குவழங்கப்பட்டுள்ளது.
ரவைகளை மீட்டெடுப்பது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலீசார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நாளை (செப்.21) மனுவை வழங்கவுள்ளதுடன்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.