By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு
தீவகச் செய்தி

மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு

Last updated: 2020/08/28 at 6:10 PM
Published August 28, 2020 688 Views
Share
2 Min Read
SHARE

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டைதீவு, கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் தெற்கு கடற்கரை சுடலை வீதியில் உள்ள நான்கு பேருக்கு சொந்தமான 62 பரப்பு தனியார் காணிகளை கடற்படையினரின் முகாமை விஸ்தரிப்பதற்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக இன்று நில அளவைத் திணைக்களத்தினர் ஊடாக காணி அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதன்படி நில அளவை திணைக்களத்தினர் அங்கு வருகை தந்த போது அப்பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். அத்துடன் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து எழுத்து மூலமான கடிதத்தினையும் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் நிலங்களை அளப்பதை கைவிட்டு சென்றனர். குறித்த மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலைமை காணப்பட்டது.

அப்பகுதியில் ஏராளமான பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும், கடற்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை புலனாய்வாளர்கள் தமது கையடக்க தொலைபேசிகள் ஊடாக காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நாடாளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , உதயன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளருமான ஈ .சரவணபவன் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் , கஜதீபன் சட்டத்தரணிகளான நடராஜர் காண்டீபன் கனகரத்தினம் சுகாஷ் , தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி செயலாளர் சேனாதிராசா கலை அமுதன் , உபசெயலாளர் கருணாகரன் குணாளன் , வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி , கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , சிறீபத்மராஜா , மேரி மற்றில்டா ( தங்கராணி ) , கோபாலகிருஷ்ணன் , ஞானேஸ்வரன் கேதீஸ்வரன் , ஜெயகரன் , யாழ் மாநகரசபை பிரதி மேயர் ஈசன் , மண்டைதீவு தர்சன் , தனுபன் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர் .

You Might Also Like

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR August 28, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நண்பர்கள் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வு – 2020
Next Article தொடர்கிறது குறிகட்டுவானிலும் மீள் பதிவு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025
தீவகச் செய்தி

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?