மணற்காடு கடற்பகுதியில் காணாமல் போன மீனவர் இன்று (ஜூன் 28) காலைசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் இருந்து நேற்று அதிகாலைகட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடையஇரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
நேற்று அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலிற்க்காக சென்றுள்ளார்.
வழமையாக 9 :00 மணியளவில் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள்படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.இதனையடுத்து மீனவர்கள் பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி போலீசார் தீவிர விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.