பௌத்த பெரஹராக்களை பாதாளக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை – உலப்பனை சுமங்கல தேரர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எமது நாட்டில் தற்போது நடைபெறும் பௌத்த பெரஹராக்களை பிக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லாது, பாதாளக் குழுக்களே தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், இது பௌத்த மதத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

மகா சங்க மாநாட்டில் உரையாற்றிய அவர், பௌத்த மதத்தின் பாரம்பரிய விழுமியங்களும் மத நிகழ்வுகளின் புனிதத் தன்மையும் படிப்படியாக சீர்குலைந்து வருவதாகக் கவலை வெளியிட்டார்.

பெரஹரா உள்ளிட்ட மத நிகழ்வுகள், பிக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத நிர்வாக அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற வேண்டிய நிலையில், தற்போது சட்டவிரோத பாதாளக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலை தொடர்ந்தால், பௌத்த மதத்தின் ஒழுக்கம், மரபு மற்றும் சமூக மரியாதைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மத நிகழ்வுகளின் சுயாதீனத்தன்மையையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்க அரசு மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் உலப்பனை சுமங்கல தேரர் வலியுறுத்தினார்.

அத்துடன், பௌத்த மத நிறுவனங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி, மத நிகழ்வுகளில் சட்டவிரோத தலையீடுகளை முற்றாகத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவெனவும் அவர் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment