By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு பிரசன்ன ரணதுங்க விடுத்த எச்சரிக்கை!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு பிரசன்ன ரணதுங்க விடுத்த எச்சரிக்கை!
இலங்கைச் செய்தி

போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு பிரசன்ன ரணதுங்க விடுத்த எச்சரிக்கை!

Last updated: 2023/07/17 at 3:59 PM
Published July 17, 2023 529 Views
Share
2 Min Read
SHARE

கட்சியை இரண்டாம் பட்சமாக்கி நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம். நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. போராட்டக்காரர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எமது ஆதரவாளர்களை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கினால் வட்டியுடன் நட்டஈடு செலுத்த அவர்கள் தயாராக வேண்டும்.

இவ்வாறு வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பாாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொருளாதாரப் பாதிப்பை ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள். எரிபொருள், எரிவாயு ஆகிய அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு, பொருளாதாரப் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் எமது அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மக்களின் ஜனநாயக போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிச கட்சி பயங்கரவாத போராட்டமாக மாற்றியமைத்தது. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் போராட்டத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற எடுத்த முயற்சியை நாடாளுமன்றத்தின் ஊடாக நாங்கள் தோற்கடித்து ஜனநாயகம், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை உறுதிப்படுத்தினோம்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி திட்டமிட்ட வகையில் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் மற்றும் எமது ஆதரவாளர்களின் வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.

ஒரு காலத்தில் நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்தேன். போராட்டத்தால் மஹிந்த ராஜபக்சவின் பலமான அமைச்சரவை பதவி விலகியது. அதைத் தொடர்ந்து கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

ஆட்சியாளர்கள் இல்லாமல் நாடு இருந்த போது எவரும் நாட்டுக்காகவேனும் அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை. கட்சியை இரண்டாம் பட்சமாக்கி, நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். 69 இலட்ச மக்களின் எதிர்பார்த்தை முழுமைப்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம்.

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. கட்டம் கட்டமாக நாடு வழமைக்கு திரும்புகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்-என்றார்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali July 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தபால் திணைக்களத்தை தனியாருக்கு விற்கும் திட்டமில்லை!- இராஜாங்க அமைச்சர் ஷாந்த தெரிவிப்பு!
Next Article வேலணை விழாப்புலம் காளிகாபரமேஸ்வரி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?