பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் வறிய நிலை வசிக்கும் 50 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப் பணியாக உலர் உணவுப் பொதிகள் இன்று (ஜனவரி 7) வழங்கிவைக்கப்பட்டது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான திரு.விசுவாசம் செல்வராசா (பிரான்ஸ்)அவர்களின் நிதி ஏற்பாட்டில்,ரூபா ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை ஆவரங்காலில் வைத்து பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் ந.விந்தன் கனகரட்னம் அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாகசபை உறுப்பினர்களான பொறியியலாளர் சா.தவசங்கரி,ஆகியோரால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்வில் அச்சுவேலி தம்பாலை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான R. பகீரதன்,அச்சுவேலி ஆவரங்கால் நவோதயா சனசமூக செயலாளர் திருமதி பத்மநாதன் சித்திரா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து,உதவி திட்டங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article