By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாட்டு கூட்டம்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாட்டு கூட்டம்!
வன்னிச் செய்திகள்

பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாட்டு கூட்டம்!

Last updated: 2023/02/18 at 11:46 PM
Published February 18, 2023 471 Views
Share
2 Min Read
SHARE

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 17) நடைபெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் க. ஸ்ரீமோகனனின் தலைமையில் இடம்பெற்றது.

திருவிழாவானது எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 ஆம் திகதி நற்கருணை வழிபாடும், பவனியும் நடைபெற்று, 11 ஆம் திகதி திருவிழா திருப்பலியுடனும், புனிதரின் திருச்சுரூப ஆசீருடனும் இனிதே நிறைவுபெறவுள்ளது.

அந்தவகையில் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய 128 ஆம் ஆண்டு திருவிழாவை சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக திருவிழா காலங்களில் திருத்தலத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கான பொது வசதிகள், சுகாதார மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

பொதுமக்களுக்கான குடிநீர் வசதிகள், போக்குவரத்து, மலசலகூட வசதிகள், பொதுசுகாதார வசதிகள், ஆலய சுற்றாடல் துப்பரவுப் பணி, வைத்திய வசதிகள், முதலுதவி, பொலிஸ் பாதுகாப்பு, ஆலய பகுதிகளுக்கான மின்சார வசதி, போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும் உற்சவகாலப் பணிமனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்பட்டதோடு முடிவுகளும் எட்டப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் ஜெ.றெமின்ரன், பூநகரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், கிளிநொச்சி மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஆர். எச். சகாயநாயகம் அடிகளார், பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி லியான்ஸ் ஜான் அடிகளார், கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சில்வெஸ்டர்தாஸ் அடிகளார், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிராந்திய சுகாதாதர சேவைகள் பணிமணை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாலைதீவு அந்தோனியார் ஸ்தலம், தவக்கால யாத்திரை ஸ்தலமாக விளங்குவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவக்கால தியானத்திற்காகவும், திருச்சிலுவைப்பாதை தியானத்திற்காகவும், தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் அங்கு சென்று தூய அந்தோனியாரின் பரிந்துரையால் இறையருள் பெற்று செல்வதும் குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali February 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடலியடைப்பில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்!
Next Article தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?