By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட போதகர் தலைமையிலான குழு கைது!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட போதகர் தலைமையிலான குழு கைது!
யாழ்ப்பாணம்

பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட போதகர் தலைமையிலான குழு கைது!

Last updated: 2023/04/10 at 10:00 PM
Published April 10, 2023 384 Views
Share
1 Min Read
SHARE
உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கிறிஸ்தவ போதகர் குழுவைச் சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (ஏப்ரல் 10) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
அச்சுவேலிப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் உட்பட 30 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டது.
கிறிஸ்தவ சபையின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காகவே போதகரும் குழுவினரும் உதயன் தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.
உதயன் ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தித் தாக்க முயன்றதுடன், உதயன் பணியகத்துக்குள் பணியில் இருந்தவர்களை காணொலி பதிவு செய்து அச்சுறுத்தியதுடன், அநாகரிகமாக நடந்து கொண்டமை, செய்தியை வழங்கியவர்களை இனங்காட்ட வேண்டும் என்று அச்சுறுத்தியமை போன்ற பல்வேறு அடாவடிச் செயல்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்யும் நடவடிக்கைள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனையோரும் கைது செய்யப்பட்டு விரைவில் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You Might Also Like

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

Anarkali April 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பிரபல பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து கிறிஸ்தவ போதகர் தலைமையிலான குழு அடாவடி!
Next Article வல்வெட்டித்துறையில் பல மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025
யாழ்ப்பாணம்

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

July 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?