நெடுந்தீ்வு நற்குண முன்னேற்ற அமைப்பால் முற்றிலும் இலவசமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையினை விட்டு விலகியோருக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளது.
இதன் அடிப்படையில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களுக்குஆரம்பக்கல்வி வகுப்புக்களும், தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையானமாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், சிங்களம், ஆங்கிலம், கணனி ஆகிய வகுப்புக்களும் நடைபெறவுள்ளது.
மேலும் பாடசாலையில் இருந்து விலகியவர்களும், மேலதிக கற்கைக்காககாத்திருப்போரும் வயது வேறுபாடு இன்றி கணனி, ஆங்கிலம், சிங்களம், தையல், அழகுக்கலை போன்ற பயிற்சிகளில் வகுப்புகளில் இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவாக கற்கை நெறிகள் நடைபெறுவதுடன் குறிப்பிடத்தக்களவிலான மாணவர்கள் பதிவுகளை மேற்க்கொண்டால்மாத்திரமே வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும்.
நிலையத்தில் கற்கை நெறிகளை தொடருகின்ற மாணவர்களுக்கு உதவிகள்தேவைப்படும் பட்சத்தில் அவை வழங்கப்படுவதுடன் முற்றிலும் இலவசமான இவ்வகுப்புக்களில் இணைந்து இறுதியில் பெறுமதியான சான்றிதழ்களை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பால் முற்றிலும் இலவசமாகநடாத்தப்படும் சகல வகுப்புகளும் நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.