நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம்விளையாட்டு நிகழ்வு நேற்றையதினம் (மே26) சென் அன்ரனீஸ் நிலாஜோதிமுத்தமிழ் நாடக மன்ற அரங்க முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின்பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், கன்னியர்மட முதல்வர்அருட்சகோதரி சுகிர்த செல்வி, றோ.க.மகளிர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரிமரீனா , நெடுந்தீவு பிரதேசசெயலக முன்பிள்ளை பருவ மேம்பாட்டுஉத்தியோகத்தர் திருமதி டானியல் நிஷாந்தினி, பாடசாலைகளின் அதிபர்கள்மற்றும் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.