“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 இறுதிப் போட்டி நேற்றையதினம் (ஜூன் 22) நெடுந்தீவில் கோலாகலமாக இடம்பெற்றது.
நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் BLACK TIGERS அணி எதிர் கரிகாலன்சேனை அணி மோதிக்கொண்டது.
DFL – 2025 தொடரினை அரவிந்தின் – அருள் ஜோசப் தலைமையிலான BLACK TIGERS அணி சம்பியன் பட்டத்தை வென்று அமரர் தோ.சகாய சதீஸ்வரன்வெற்றிக்கிண்ணம், புதிய சுற்றுக்கிண்ணம் மற்றும் பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டனர்.
DFL -2025 தொடரில் உரிமையாளர் கொண்சியஸ் தலைமையிலான கரிகாலன்சேனை அணி இந்த ஆண்டிற்கான இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன் பணப்பரிசினையும் அமரர் தோ.சகாய சதீஸ்வரன் வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆண்டிற்கான மூனரறாவது நிலை அணியாக லூகிஸ் தலைமையிலானeagle eyed அணி கிண்ணத்தினையும் , பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டது.