நெடுந்தீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகமும், கட்சியின் நிலைப்பாடும் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வட்டார ரீதியிலான பிரச்சார கூட்டம் இன்று (ஏப்ரல்01) நெடுந்தீவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பங்கேற்புடன் நெடுந்தீவு மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரச்சார கூட்டம் நெடுந்தீவின் 08 வட்டாரங்களிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.