நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையினை அண்மித்த பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் இன்று (ஏப்ரல்29) கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் நெடுந்தீவிலுள்ள கடற்தொழில் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், சமாசத்திற்கு சொந்தமான பழுதடைந்த படகினையும் பார்வையிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் அலுவலக திறப்பின் பின்னர் அங்கு நெடுந்தீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.