மே தினக் கூட்டங்கள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் நாளை (மே 1) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இத்திட்டம் அந்தந்த பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாகவும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதிக்கப்பட்ட உணவகங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது எனவும் திணைக்களம் தனது அறிவித்தலில் தெளிவுபடுத்தியுள்ளது.