யாழ் நல்லூர் அரசடியின் ஒரு பகுதியை தனிமைப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகாலையில் தேர் உற்சவம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஒருவரே முதலில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
தற்போது, ஆலயத்திற்கு சென்ற பலர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் நோய் அறிகுறிகளுடன் உள்ளனர். தற்போது 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.