நயினாதீவு பிரதேச மக்களுக்கு வேலணைப் பிரதேச செயலகம் விடுக்கும் அறிவித்தல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு நயினாதீவு பிரதேசத்தில் இருந்து அவசர தேவை மற்றும் கடமை நிமித்தம் சென்று வருபவர்களின் நலன் கருதி ஓர் படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நயினாதீவிலிருந்து படகு புறப்படும் நேரம் காலை 7.00 மணி குறிகட்டுவானிலிருந்து பேருந்து புறப்படும் நேரம் காலை 7.30 மணி அதே போன்று யாழில் இருந்து குறிகட்டுவானிற்கு பேருந்து புறப்படும் நேரம் மாலை 4.30 மணி மற்றும் நயினாதீவிற்கான படகுச் சேவை மாலை 5.30மணிக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

குறிப்பு: குறிகட்டுவானிலிருந்து பேருந்தில் பயணிப்போர் புங்குடுதீவு பிரதேசத்தில் எக்காரணம் கொண்டும் இறங்க முடியாது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

.

Share this Article