நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடந்த ஜூன் 22 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை மாலை நயினாதீவு மகா வித்தியாலயம் மற்றும் நயினாதீவுஶ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைசாரணர்களுக்குமான சாரணர் சின்னம் சூட்டும் விழா சிறப்பாக இடம்பெற்றது.
இரு பாடசாலைகளின் அதிபர்களான தி. நிதர்சனன் மற்றும் சி.சிவேந்திரன்ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை சாரணர் சங்கம் யாழ் மாவட்டகிளையின் மாவட்ட ஆணையாளர் ம.பிரதீபன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக க. சிவகரன் பிரதேச செயலாளர் –வேலணை, க. பரமலிங்கம்தலைவர் அறங்காவலர் சபை நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானம்ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.