ஜனாதிபதியினால் இவ் வருடம் பிரகடனப்படுத்தப்பட்ட தென்னை முக்கோணத்திட்டத்தின் கீழ் புது நடுகைத் திட்டம் மற்றும் வீட்டுத் தோட்டத்திட்டம்என்பவற்றினூடாக யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஒவ்வொன்றும் ரூ.300 பெறுமதியான 69,632 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
இதில் புதுநடுகை திட்டத்தின் கீழ் 1/4 ac இற்கு மேற்பட்டதும் 50 ac இற்கு உட்பட்டதுமான காணிகளுக்கு 417,792 தென்னம்பிள்ளைகள்வழங்கப்படவுள்ளன.
இத்திட்டமானது தனியார் காணிகள் எனின் காணியின் உறுதி அல்லது போமிற் போட்டோ பிரதி அல்லது கிராம சேவையாளரால் உறுதிப்படுத்திய பிரதேசசெயலாளரால் சான்றுபடுத்தப்பட்ட ஆவணங்கள் கட்டாயமானது, அரசநிறுவனங்களின் காணிகள், வணக்க ஸ்தலங்கள் போன்றவற்றிற்கும் இது பொருந்தும்.
வீட்டுத் தோட்டம் என்ற திட்டத்தின் கீழ்1-15 வரையிலான தென்னம்பிள்ளைகள்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்ட வகையில் சமுர்த்தி பயனாளிகள் , பாடசாலைமாணவர்கள் ,அரச பணியாளர்கள் விளையாட்டுக்கழகங்கள், அறக்கொடைநிலையங்கள் இளைஞர் கழகங்கள், மாதர் சங்கங்கள் என்பவற்றிற்கு 278,528 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 1/4 ac தொடக்கம் 50 ac வரையிலான இவ்வருடம்ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் வரை புதுநடுகைத் திட்டத்தின் கீழ்தென்னம்பிள்ளைகள் எடுத்த அல்லது எடுக்கவுள்ள பயனாளிகளுக்கு குழாய்நீர்ப்பாசனம் அல்லது தூவல் நீர்ப்பாசனம் அல்லது சொட்டு நீர்ப்பாசனம்செய்திருந்தால் ஏக்கரிற்கு ரூ. 30,000 மானியத்தொகை வழங்கப்படவுள்ளது.
பசளை மானியத் திட்டத்தின் கீழ் 1/4 தொடக்கம் 5 ac வரையிலான காய்க்கும்மரங்கள் உள்ள தென்னம்பிள்ளைகளுக்கு AMP பசளையானது அரைமானியவிலையில் ஒரு அந்தருக்கு ரூபா. 4000 வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், தேவையானவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கும், தென்னை செய்கையில்ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவைநிலையங்களிலுள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்திஉத்தியோகத்தர்களினையோ அல்லது பளை பிரதேசத்திலுள்ள பிராந்தியகாரியாலயத்தின் தொலைபேசி இலக்கம் 021 2284 501 உடன் தொடர்புகொண்டு உரிய தகவல்களினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.