தமிரசுக்கட்சியின் பிரச்சார செயற்பாடு இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2020ம் ஆண்டு பொதுத் தேர்தலினை முன்னிட்டு தமிழரசுக்கட்சியினரும் நெடுந்தீவில் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர். நேற்றைய தினம் (ஜீலை 26) தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 10இல் போட்டியிடும் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஞனம் சிறிதரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் வடக்கு மாகாண சபை உறுபினர் திரு.பசுபதிப்பிள்ளை அவர்களும் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் தயாபாரன் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம் வருகை தந்து மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர் நேற்றைய தினம் வருகை தந்த குழுவினர் இனறைய தினமே நெடுந்தீவில் இருந்து மீளத்திரும்பினர்


அதே சமயம் இலக்கம் இரண்டில் போட்டியிடும் மாநகர சபையின் முதல்வர் திரு.இம்மானுவேல் ஆனல்ட் அவர்களும் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்கள் சகிதம் நெடுந்தீவுக்கு வருகை தந்து மக்களை சந்தித்து தனது பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டார்

Share this Article