டெங்கு பரவலை ஒழிக்க இலங்கை விமானப்படையின் சிறப்பு திட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படியும், இலங்கை விமானப்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழும், இலங்கை விமானப்படையானது, நாடு முழுவதும் அமைந்துள்ள விமானப்படைத் தளங்கள் வழியாக அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், இலங்கை விமானப்படைப் பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள், சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் சமூகத்தினருடன் இணைந்து, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழித்தல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

மக்களின் நலனை உறுதி செய்வதையும், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கித் தொடர்ச்சியாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment