By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் – நிர்வாகச் செயலாளர் விந்தன் கனகரட்னம்
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் – நிர்வாகச் செயலாளர் விந்தன் கனகரட்னம்
யாழ்ப்பாணம்

செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் – நிர்வாகச் செயலாளர் விந்தன் கனகரட்னம்

Last updated: 2024/11/08 at 11:00 AM
Published November 8, 2024 163 Views
Share
4 Min Read
SHARE

சிவாஜிலிங்கத்துக்கும் ஶ்ரீகாந்தாவுக்கும் உள்ள அர்ப்பணிப்பு, தியாகம் என்பனசெல்வம் அடைக்கலநாதனுக்கு கால் தூசு அளவுக்கு கூடவில்லை எனஅக்கட்சியின் நிர்வாகச் செயலாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள்உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (நவம்பர் 07) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 2ம் திகதி திருகோணமலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைமை குழு கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றகலந்துரையாடலில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள், பிரதிநிதிகள் என 35 பேர் கலந்துகொண்டு பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும்வேட்பாளர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன் போது கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில்போட்டியிட்டு படுதோல்வியடைந்த குற்றப்பின்னணி கொண்ட ஒருவரைநியமிக்கவேண்டாம் என வலியுறுத்தியிருந்தேன்.

இதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எனது பெயரைமுன்மொழியப்பட்டது.

இறுதியாக கட்சி சார்பில் எனது பெயர் நீக்கப்பட்டு இன்னொருவருடைய பெயர்புகுத்தப்பட்டது.

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் குருசாமி சுரேந்திரனும்இணைந்து திட்டமிட்டு எனது பெயரை நீக்கியுள்ளனர். கடந்த மாகாண சபைதேர்தலில் எனக்கு வழங்க கட்சி தீர்மானித்த வேண்டிய அமைச்சுப் பதவியைவழங்காமல் தனது மைத்துனருக்கு வழங்கினார். அவர் மாகாண சபை காலத்தில்பல மோசடிகளில் ஈடுபட்டார்.

கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் சுரேன் குருசாமியும் கட்சிக்குதெரியாமல் வன்னி மக்களுக்கு தெரியாமல் அந்த மண்ணில் 75,000 ஏக்கர்நிலப்பரப்பை அரசோடு இணைந்து கபளீகரம் செய்து நயினாமடு சீனித்தொழிற்சாலையை நிறுவவும் சிங்கள குடியேற்றத்தை அமைக்கவும்திட்டமிட்டனர். இதனால் எமது கட்சியின் பெயர் தொடர்ந்துவிமர்சனத்துக்குள்ளானது.

தமிழீழ விடுதலை இயக்கம் இன்று மூன்றாக பிரிந்துள்ளது. வன்னியில் உதயராசாதலைமையில் ஒரு அணியும் யாழ்ப்பாணத்தில் ஶ்ரீகாந்தா , சிவாஜிலிங்கம்தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்தது. செல்வம் அடைக்கலநாதனின்தலைமையை அவர்கள் விரும்பவில்லை.

சிவாஜிலிங்கத்துக்கும் ஶ்ரீகாந்தாவுக்கும் உள்ள அர்பணிப்பு, தியாகம் என்பனசெல்வம் அடைக்கலநாதனுக்கு கால் தூசு அளவுக்கு கூடவில்லை.

அவர் மோசடி ஊழல் பேர் வழி. பின்கதவு டீலை ரணில் விக்கிரமசிங்கவுடன்செய்தார். வெளிநாட்டில் எமது கட்சிக்கு ஆறு கிளைகள் ஒற்றுமையாக பலமாகஇருந்தது. அதனை சின்னாபின்னமாகி சிதறடித்தது செல்வம் அடைக்கலநாதனும்குருசாமி சுரேந்திரனுமே.

செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். குருசாமி சுரேந்திரன் மக்கள்மத்தியில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். இவர்கள் பற்றிய ஆவணங்களைவெளியிட தயார். இது தொடர்பில் பொலிஸில் முறையிடுங்கள். சட்டநடவடிக்கை எடுங்கள். கட்சியை கூட்டி

ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள். நான் ஆவணத்தை பொதுவெளியில்கொண்டுவந்து உங்களை சந்திக்கத் தயார்.

நீங்கள் போராட்டத்தில் இணைந்த காலத்தில் இதுவரை இராணுவத்துக்குஎதிராக ஒரு ரவுண்ஸையாவது சுட்டிருப்பீர்களா என செல்வம்அடைக்கலநாதனிடம் கேட்கிறேன். ஒரு பங்களிப்பு இல்லை.  ஒரு அர்ப்பணிப்புஇல்லை. கட்சியின் தலைவராக சொகுசாக இருந்து கட்சியின் வளங்களைசுரண்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

அமைச்சு பதவி போல பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இருந்தீர்கள். 22 அலுவலரை உங்களுக்கு தந்தார்கள். போராளியின் குடும்பத்தைச் சேர்ந்தயாரையாவது அதற்கு நியமித்தீர்களா? போராளிகளின் குடும்பங்கள்பிச்சையெடுக்கிறது.

குருசாமி சுரேந்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றார். நான் சங்கு தான். நான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தான். கடந்த ஜனாதிபதித் தேர்தலில்ரெலோ வன்னி மாவடட்ங்களில் வேலை செய்யவில்லை. அவர்கள் ரணில்விக்கிரமசிங்கவுக்கு திரைமறைவில் ஆதரவு கொடுத்தார்கள். தமிழ் தேசியகட்சிகள், பொதுக் கட்டமைப்பு, ஊடகங்களுக்கு இது தெரியும். இங்கு சங்குக்குவேலை செய்தது நான் மட்டும் தான்.

இதற்கு பிரதியுபகாரமாக ரணிலிடம் இருந்து பெருந்தொகையான பணத்தைபெற்று குருசாமி சுரேந்திரன் ஊடாக மட்டும் எட்டுக் கோடி ரூபாயைஒதுக்கியிருக்கிறார்.

இதன்மூலம் மீன்பிடி உபகரணங்களும் சமூக சேவைகளும் வழங்கப்படுகிறது. வாங்கிய பணத்தை கட்சியின் ஏனைய மாவட்ட பிரதிநிதிகளுக்குவாங்கியிருக்கலாமே. தனியாக அவருக்கு மட்டும் வழங்க வேண்டிய தேவைஎன்ன? அவசியம் என்ன? குருசாமி எங்கிருந்து வந்தார். என்ன பங்களிப்புசெய்தார். இந்த பதிலுக்கு குருசாமி இங்கு வரவேண்டும். அடுத்த பத்திரிகையாளர்மாநாட்டில் முழு ஆவணங்களுடன் வருவேன்.

அந்த வகையில் குருசாமிக்கு ஒரு தமிழர் வாக்களிக்க கூடாது. சங்குக்குவாக்களியுங்கள். சங்கில் நேர்மையான திறமையான பலர் இருக்கின்றார்கள். மாமனிதர் ரவிராஜின் மனைவி நல்ல ஒரு தெரிவு. குருசாமி போன்றவர்களுக்குவாக்களித்தால் எங்கள் மண் விற்கப்படும். இனமானத்தை அடகு வைத்துவிடுவார்கள் – என்றார்.

You Might Also Like

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

SUB EDITOR November 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? பசுமை இயக்கத் தலைவர் ஐங்கரநேசன் கேள்வி!
Next Article பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் மை பூசப்படும்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?