செம்மணி சிந்துப்பாத்தி இந்துமயானப் பகுதியில் காணப்பட்ட மனிதபுதைகுழியில் இருந்து இதுவரையில் ஒரு குழந்தையின் என்புத்தொகுதி உட்பட13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம்வெளிப்படுத்தப்பட்டுள்ளது சித்துப்பாத்தி இந்துமயானத்தில், நீதிமன்றஉத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
பணிகளின் ஐந்தாம் நாளான நேற்று புதன்கிழமை (ஜூன் 04) சிறியஎன்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் அதுஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அத்துடன் இதுவரை 13 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றைஅகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரைஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை. அத்துடன், வேறு சில என்புச்சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.