சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் யாழில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அனர்த்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி  வேண்டும் முகமாக, மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு  வருடந்தோறும் தேசிய ரீதியாக நினைவு கூரப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில்  இன்றைய தினம் (26.12)  காலை 09.00 மணிக்கு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர்  அவர்களினால் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது

சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,

சர்வமத் தலைவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையுரையுடன், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் சிறப்புரைகள் ஆற்றப்பட்டது.

சுனாமி முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வு காணொளி காட்சி ப்படுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாவட்டச் செயலக  உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.

Share this Article