2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துசெய்ய முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி குறித்து மோட்டார் வாகனபோக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வது குறித்து இதுவரையில்எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை என செய்தி தொடர்பில்மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குபதிலாக, புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையைஆரம்பிப்பது தொடர்பில் அறவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது