By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சமுர்த்தி கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதாகக் கூறி யாழ்ப்பாணத்தில் நூதனத் திருட்டு! – பொதுமக்கள் அவதானம்!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சமுர்த்தி கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதாகக் கூறி யாழ்ப்பாணத்தில் நூதனத் திருட்டு! – பொதுமக்கள் அவதானம்!
யாழ்ப்பாணம்

சமுர்த்தி கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதாகக் கூறி யாழ்ப்பாணத்தில் நூதனத் திருட்டு! – பொதுமக்கள் அவதானம்!

Last updated: 2023/04/07 at 1:38 PM
Published April 7, 2023 301 Views
Share
2 Min Read
SHARE

சமுர்த்தி உதவிக் கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் இரட்டிப்பாக அதிகரித்து வழங்கப்படுமு் என்று தெரிவித்து தனிமையில் இருந்த சிறப்புத் தேவையுடைய வயோதிபப் பெண்ணிடம் இனந்தெரியாத நபர் ஒருவர் பணத்தை அபகரித்துள்ளார்.

அச்சுவேலி வளலாயில் நேற்று (ஏப்ரல் 6) மதியம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

தனிமையில் வசிக்கும் அந்தப் பெண் தையல் வேலை செய்பவர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது வழங்கப்படும் சமுர்த்தி உதவித் தொகையை அடுத்துவரும் மாதங்களில் அரசால் இரட்டிப்பாக வழங்கப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக தாம் ஒவ்வொரு சமுர்த்திப் பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபா பணத்தை அறவிடுகிறோம் என்று தெரிவித்த அந்த நபர் நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பங்களை வாங்கியுள்ளார்.

தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலிலுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என்று வயதான பெண் தெரிவித்துள்ளார். பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்த அந்த நபர் வலுக்கட்டாயமாக பணத்தைக் கேட்டுள்ளார்.

வந்திருப்பவர் முகக்கவசம் அணிந்தவாறு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கடுந்தொனியில் தெரிவித்ததார். அதனால் எனக்கு இது மோசடி என சந்தேகம் ஏற்பட்டது. எனினும் பணத்தை வழங்காவிட்டால் எனது உயிருக்கு ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

பணத்தை வழங்கிவிட்டு அலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவிக்கலாம் என்று முயற்சித்த போது எனது அலைபேசியும் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்தது என்று பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அலைபேசி களவாடப்பட்டமை தொடர்பாக தொலைபேசி இணைப்பு வழங்கிய நிறுவனத்துக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் நீர்வேலி பகுதியிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகத்திலிருந்து பதிவினை மேற்கொள்ள வருகின்றோம் என்று தெரிவித்து பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You Might Also Like

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

Anarkali April 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை
Next Article 14ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
யாழ்ப்பாணம்

புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி 08 எலும்பு கூட்டு தொகுதிகள்அடையாளம்!!

July 22, 2025
யாழ்ப்பாணம்

விடுதலை நீர் சேகரிப்பு ஊர்தி இன்றுமுதல்!

July 22, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

July 22, 2025
யாழ்ப்பாணம்

கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு !

July 21, 2025
யாழ்ப்பாணம்

பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

July 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?