நாட்டில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் காணப்படாத சட்டவிரோத பிரமிட்திட்டங்கள் செயல்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி மற்றும்நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி யானகரணவீர தெரிவித்துள்ளார்.
டி.வி தெரணவில் ஒளிபரப்பான “ரீ பில்ட் சிறிலங்கா” நிகழ்ச்சியில் பங்கேற்றஅவர், இதுவரை 22 பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக்கூறினார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இருபத்தி இரண்டு பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவைகுறித்த மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குதகவல் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் அடையாளம் கண்டிருப்பது அவ்வளவுதான். இந்த நேரத்தில் கூட இந்தபிரதேசத்திற்குள் மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் செயல்படுகிறார்கள்.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகச் சொல்வது சரியாக இருக்கும்.
முதற்கட்ட விசாரணைகளை நடத்துவதற்காக 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்எங்களுக்கு வந்துள்ளன.” என்றார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை மத்திய வங்கியின் மாத்தளைபிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் யாசினி ராஜபக்ஷ, பிரமிட் திட்டத்தில், இறுதி வாடிக்கையாளரை அடையாளம் காண முடியாது என்றும், இந்தத்திட்டத்தில் விற்பனைக்குப் பிந்தைய சேவை இல்லை என்றும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”பிரமிட் திட்டங்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகள் உண்மையில்நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதை நம்புவது கடினம்.
உதாரணமாக, இந்த பிரமிட் திட்டத்தில், நாங்கள் முதலீடு செய்யும் பணம் மிகக்குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கப்படும் அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும்என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு தயாரிப்பு விற்பனை அமைப்பில் ஒரு பொருளை வாங்குவதன் மூலமும்நீங்கள் இதில் சேரலாம்.மேலும், பிரமிட் திட்டத்தில் இறுதி வாடிக்கையாளரைநாங்கள் அடையாளம் காணவில்லை.
“ஒரு பிரமிட் திட்டத்தில் உங்களுக்கு உண்மையில் விற்பனைக்குப் பிந்தையசேவை கிடைக்காது.” என்றார்.