!
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவைஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெரபகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக, முன்னாள்கடற்படைத் தளபதி இன்று (ஜூலை28) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
அதன்படி, அவர் இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில்முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அவர் கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில்நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக அட்மிரல் நிஷாந்தஉலுகேதென்ன ஜூலை 15, 2020 அன்று பதவியேற்றார்.
டிசம்பர் 18, 2022 அன்று தனது பதவிக்காலம் முடிந்ததும் அவர் இலங்கைகடற்படையின் தளபதி பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.