நான் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள செம்மனி பாரிய மனித புதைகுழிகாணப்படும் இடத்தில் நிற்கிறேன். கொடூரமான கடந்த காலங்கள் தெளிவாகப்புலப்படும் இடங்களுக்கு பிரயாணம் செய்வது என்பது உணர்ச்சிவசப்படக் கூடியஒரு விடயம் என ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரக் யாழில்தெரிவித்த உணர்ச்சி பூர்வமான கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
தொடரந்து தனது உரையில் அவர்….
இங்கு நான் தமது அன்புக்குரியவர்களை தொலைத்த உறவுகளை சந்தித்தேன். பெண்கள் 1990 களின் நடுப்பகுதியில் தமது கணவன்மாரை இழந்துள்ளார்கள். தாங்கள் நேசித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இவர்கள்துன்பப்பட்டுக் கொண்டுள்ளார்கள். இவர்களோடு பேசும்போது அத்துன்பம்என்னையும் ஆட்கொண்டுள்ளது.
எனவே ஒரு படி மேல் நீதி நியாயம் பொறுப்பு கூறல் என்பவற்றின் ஊடாகவே ஒருநியாயமான நிலையை எட்ட முடியும். அல்லாவிடின் இது ஒரு மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயமே.
எனவே தடயவியல் நிபுணர்களினால் ஒரு சுயாதீனமானதும்முழுமையானதுமான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டியதுஅவசியமாகும்.
இதன் மூலம் தமது உறவுகளை தொலைத்த குடும்ப அங்கத்தவர்களின்காயங்களுக்கும் துன்பங்களுக்கும் ஒரு முடிவை எட்ட முடியும் என தெரிவித்தார்.